முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை,பிப்.24 - இரு வேறு சாலைவிபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி வட்டம், காமராஜர் சாலையில் 22.2.2012 அன்று லேடி வெல்லிங்டன் ஆசிரியை பயிற்சி பள்ளி அருகில், இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது சென்னை மாநகர பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த, சென்னை, முகலிவாக்கம் போரூரைச்சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் எஸ்.ராஜேஷ் சம்பவ இடத்திலேயும், அவ்வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெர்னாஸ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், களமாவூர் கிராமம், திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 22.2.2012 அன்று திருச்சிராப்பள்ளியிலிருந்து மணமேல்குடி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், புதுக்கோட்டையிலிருந்து திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்த வேனும் நேருக்கு நேர் மோதியதில், வேனில் பயணம் செய்த அறந்தாங்கி வட்டம், மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயும் , பலத்த காயமடைந்த அருள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இவ்விரு சாலை விபத்துகளில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்