எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.27 -தற்போது 468 கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதானத்திட்டம் மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும், புதிதாக 1006 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும் என்றும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறை குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்து பராமரிக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 20112012 ஆம் ஆண்டு 1,006 திருக்கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று, வரும் ஆண்டிலும் 1,006 கோயில்கள் தெரிவுசெய்து குடமுழுக்கு செய்யப்படும்.
தவறாக வகைமாற்றம் செய்யப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோயில் சொத்துகளை விரைந்து மீட்பதற்காகவும், கோயில் நிலங்கள் குறித்த வழக்குகளை தீர்ப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வருவாய் அலகுகளும், வருவாய் nullதிமன்றங்களும் மேலும் வலுப்படுத்தப்படும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த உன்னதத் திட்டமாகிய அன்னதானத் திட்டம் தற்போது 468 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 20122013 ஆம் ஆண்டில் மேலும் 50 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்துக் கோயில்களிலும், பக்தர்களுக்கு சுகாதாரமான உணவு அளிக்கும் வகையில், சமையற்கூடங்கள் நவீனப்படுத்தப்படும். ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலிலும், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் தொடர்ந்து அன்னதானம் அளித்திட முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில், 25 கோடி ரூபாய் செலவில் பயணியர் விடுதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக, குறிப்பாக, முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு வசதியான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பிவட சீருந்து வசதி ஏற்படுத்தப்படும். இன்னொரு சிறப்பு முயற்சியாக, நமது பண்டைய இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, nullதிநெறிக் கருத்துகளை கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனத்தில் ஆழப்பதித்திட, சனிக்கிழமை தோறும் ஆன்மீக, nullதிநெறி வகுப்புகளை முக்கிய திருக்கோயில்களில் நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த வகுப்புகளின்போது சிற்றுண்டி அளிக்கப்பட்டு, சிறந்த மாணவ மாணவியருக்கு பரிசுகளும் அளிக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


