எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. மார்ச். - 27 - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா திருச்சியில் இருந்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் பொதுமக்களும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இதுதவிர திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியிலும் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில் 3ம் நாள் தன்னுடைய தேர்சல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மாலை 5.15 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து துவங்கினார். அங்கிருந்து ஐயப்பன் கோவில், அரசு தலைமை மருத்துவமனை வழியாக 5.25 மணிக்கு திருச்சி புத்தூர் நாலுரோடு வந்தடைந்தார். முன்னதாக அந்த பகுதியில் மதியம் 2 மணியில் இருந்து அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி ஜெயலலிதாவை வரவேற்க காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து புத்தூர் நாலுரோட்டில் இருந்து ஜெயலலிதா மூன்றாம் பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கி திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசியதாவது:-
நபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, தமிழக மக்கள் திமுக ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று தரும் தேர்தல் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கருணாநிதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்ந்தது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் 9 முறை விலை உயர்த்தப்பட்டது. விலைவாசியும் குறையவில்லை. மணல் கொள்ளை இன்னமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கருணாநியின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. அதேபோல் கிராணைட் கொள்ளை மூலம் 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு பதிலாக மின்வெட்டு பெருகிவிட்டது. இதனால் மின்வெட்டு மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் இந்தியாவிலேயே தன் மக்களுக்கு கோடி கோடியாக சம்பாதித்த ஒரே முதல்வர் கருணாநிதி.
தமிழக முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப்படுகின்றனர். திருச்சியை பொறுத்தவரை இங்கு உள்ளூர் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியும். அனைத்து வசதிகளுடன் கூடிய திருச்சி புதிய பேருந்து நிலையத்தை அமைத்து காட்டுவோம். பொதுமக்களுக்கும், வியாபாரிகளையும் பாதிக்காத வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். திருச்சி புத்தூர் தலைமை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவோம். திருச்சி ஜங்சன் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துவோம். திருச்சி நகரில் குடிnullநீர் பிரச்சனைகளை தீர்ப்பதோடு தரமான சாலை வசதிகளை செய்வோம். போக்குவரத்து இடையூறுகளாக திருச்சி மேலப்புதூர் கான்வென்ட் பகுதி, தலைமை தபால் நிலையம், மெயின்காட்கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்ல நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
அமைச்சர் நேருவின் அட்டகாசத்தால் nullநீங்கள் பாதித்து இருப்பதை நான் நன்கு அறிவேன். நேரு அவரது சகோதரர் ஆகியோருக்கு தெரியாமல் திருச்சி மாவட்டத்தில் யாரும் இடத்தை வாங்கி பதிவு செய்ய முடியாது. அமைச்சர் கே.என்.நேரு தன்னுடைய பினாமிகளின் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நேருதான் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் நேருவை தோர்கடிக்க செய்வீர்களா? (செய்வோம் செய்வோம் என தொண்டர்கள் கோஷமிட்டனர்) திமுக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இடஒடுக்கீடு அளிப்பதாக கருணாநிதி கூறினார். ஆனால் அதை நடைமுறையில் அமுல்படுத்த வில்லை. உங்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் அதோடு இஸ்லாமியர்களின் அணைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மின்வெட்டு அடியோடு ரத்து செய்யப்படும். விலைவாசி உயர்வு குறைக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும். உங்களுடைய உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் அதோடு அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
பொதுமக்களாகிய உங்கள் பணத்தைதான் சுரண்டி வைத்துக்கொண்டு ஓட்டுக்கு 1 லட்ச ரூபாய் வரை கொடுப்பார். அந்த பணத்தை nullநீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் மனசாட்சி எப்படி சொல்கிறதோ அப்படி செய்யுங்கள். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் திருமண உதவித்தொகையான ரூபாய் 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். அதேபோல காற்றாடி, கிரைண்டர், மிக்ஸி ஆகியவைகளும் இலவசமாக வழங்கப்படும். அதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் வழங்கப்படும் ரூபாய் 500 உயர்த்தி 1000 ரூபாயாக வழங்கப்படும். கரும்பு டன் கொள்முதல் 2500 உயர்த்தி தரப்படும். 11ம், 12ம் வகுப்பு ஆகிய படிப்புகளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிக்கும் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் கம்யூட்டர் வழங்கப்படும். கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா நான்கு ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
பால் உற்பத்தியை பெருக்க தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
சுயஉதவிக்குழுக்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும். 58 வயது மேற்பட்டவர்களுக்கு உள்ளூர் அரசு பேருந்துகளில் செல்ல இலவச பஸ்பாஸ் வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 3 லட்சம் குடும்பங்களுக்கு 300 சதுர அடியில் நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். நிலமற்றவர்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும். குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க இந்த மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக மரியம்பிச்சை நிறுத்தப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.
அதைதொடர்ந்து திருச்சி தென்னூர் தில்லைநகர், கோகினூர் தியேட்டர் வழியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஜெயலலிதா சென்றார். அங்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரனை ஆதரித்து ஜெயலலிதா வரலாறு காணாத கூட்டத்தில் பேசினார். முன்னதாக திருச்சி சங்கம் ஓட்டலில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் மற்றும் தோழமை கட்சி தொண்டர்கள் கைகளில் கொடிகலை ஏந்தி ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.