எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 9 - புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.முதலமைச்சரை வரவேற்க அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். புதுக்கோட்டைத் தொகுதியில் இந்திய கம்யூ. கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக இருந்த முத்துக்குமரன் விபத்தில் மரணமடைந்ததையொட்டி, அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அத்தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐஜேகே சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என 20 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய கட்சிகளான திமுக, மதிமுக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை. அதிமுக, தேமுதிக இடையே இங்கு நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றிக்காக அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நியமித்த தேர்தல் பொறுப்பாளர்களான, அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து நடிகர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். நடிகர்கள் ராமராஜன், செந்தில், தியாகு, குண்டு கல்யாணம், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், லியாகத் அலிகான், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் பொறுப்பாளர்கள்,அமைச்சர்கள், தொகுதியில் முகாமிட்டு பம்பரம் என செயல்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வீடு வீடாகச் சென்று அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று புதுக்கோட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதை யடுத்து தேர்தல் ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செந்தில் பாலாஜி, மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜய் பாஸ்கர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பழனிச்சாமி, ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் (பொதுப் பணித்துறை) சத்தியேந்திரன் ஆகியோர் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் இடங்களில் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை தொகுதியில் உள்ள கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். அவர் அங்கு 9 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று ஏற்கனவே அ.தி.மு.க. தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி முதலில் புதுப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் துவக்குகிறார். அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிமுக நிர்வாகிகள் பொள்ளாச்சி ஜெயராமன், கே.கே.கலைமணி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.முருகானந்தம் ஆகியோர் ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகிறார்கள். அடுத்ததாக மாத்தூர் என்ற இடத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். அங்கு அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இச்சடி என்ற இடத்தில் முதலமைச் சர் பேசுகிறார். அமைச்சர்கள் செ.தாமோதரன், தங்கமணி, செந்தூர் பாண்டியன், எம்.எஸ்.எம். ஆனந்தன், தொழிற்சங்க செயலாளர் சின்னச் சாமி எம்எல்ஏ, வேணுகோபால் எம்பி, அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். பின்னர் அண்டகுளம் விளக்கு, ஜீவா நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை அடுத்து பிருந்தாவனம் என்ற இடத்தில் முதலமைச்சர் பேச இருக்கிறார். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மூர்த்தி, கே.டி.பச்சமால், மாணவர் அணிசெயலாளர் சரவணபெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா ஆகியோர் முதலமைச்சரை வரவேற்க ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். அடுத்ததாக மியூசியம் கார்னர் என்ற இடத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஓட்டு வேட்டையாடுகிறார். இங்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செல்லப் பாண்டியன், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மதுசூதனன், பி.எச்.பாண்டியன், மு.தம்பிதுரை, ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ, வைகை செல்வம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அண்ணாசிலை அருகே நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்கிறார். அமைச்சர்கள் பா.வளர்மதி, செல்லூர் ராஜ், எம்.சி.சம்பத், டி.கே.எம்.சின் னையா, டாக்டர் சுந்தர்ராஜன், பி.வி. ரமணா, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இறுதியாக டிவிஎஸ் கார்னர் என்ற இடத்தில் முதலமைச்சர் பேசுகிறார். அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, கே.வி.ராமலிங்கம், கோகுல இந்திரா, கே.ஏ.ஜெயபால், டாக்டர் வி.எஸ்.விஜய், முகமது ஜான், என்.சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். பிரசாரத்தை முடித்துக் கொண்டு இன்று மாலையே சென்னை திரும்புகிறார். டிவிஎஸ் கார்னரில் உரையாற்றிய பிறகு அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டு திருச்சி செல்கிறார்.அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரசாரம் நாளை (10ம் தேதி) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. 12ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 18 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 May 2024சென்னை : கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் என்று எஸ்.எஸ்.எல்.சி.
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்
10 May 2024கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
10 May 2024சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
10 May 2024சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட்
10 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்
10 May 2024புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது : கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
10 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
10 May 2024சென்னை : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற