எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம், ஜூலை6 -250 ஆண்டுகளுக்கு பிறகு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்பட லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று காஞ்சிபுரம் தேவராஜசுவாமி (ஸ்ரீவரதராஜபெருமாள்) திருக்கோவில். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் சுவர் ஓவியங்கள் பழமையான கல்வெட்டுக்கள் போன்றவற்றை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் 2 ராஜகோபுரங்கள், பல சிறிய கோபுரங்கள் மற்றும் 5 பிரகாரங்களை கொண்டுள்ளது. முதலாம் ராஜராஜசோழனால் கி.பி.1018 -1054ம் ஆண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
காயத்திரி மந்திரத்தின் தத்துவத்தை விளக்கும் வகையில் 24 படிகள் கொண்ட அஸ்தகிரி என அழைக்கப்படும் திருமலையில் புண்ணியகோடி விமான மத்தியத்தில் நின்ற திருக்கோலத்தில் மூலவர் எம்பெருமாள் காட்சி தருகிறார். மேலும் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பு 24 ஏக்கர். கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் படிகட்டுகள் 24. கொடி மரத்தில் உள்ள அடுக்குகள் 24. மதில் சுவரில் உள்ள கற்களின் அடுக்குகள் 24 ஆகும். கோவில் வளாகத்தில் 14 ஏக்கர் பரப்பில் 3 தோட்டங்கள் உள்ளன. அனந்தசரஸ் மற்றும் பொற்றாமரை என்ற 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் நகைகள் பெருமாளுக்கு சொந்தமாக உள்ளன. பெரிய தேர், 45 சிலைகள் கோவிலுக்கு சொந்தமாக உள்ளன. தற்போது இந்த கோவிலில் 5 கால பூஜை நடந்து வருகிறது.
இப்படி பல வரலாற்று சிறப்புகளையும் புகழையும் பெற்ற இந்த கோவிலில் முழுமையாக கும்பாபிஷேகம் நடந்து 250 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று கூறப்படுகிறது. இது பக்தர்களிடையே மனக்குறைவை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே இந்த குறையை போக்க வரதராஜ பெருமாள் கோவிலில் முழுமையாக திருப்பணி செய்ய கடந்த 2007ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிக்காக ரூ.1 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிதியை வைத்தும் நன்கொடையாளர்களிடம் இருந்து பெற்ற பல கோடி ரூபாய் நிதியை வைத்தும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருந்தேவி தாயார் சன்னதிக்கு தங்க விமானம் உருவாக்கும் திருப்பணி சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், கிழக்கு ராஜ கோபுரம் மற்றும் மேற்கு ராஜ கோபுர திருப்பணிகள் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலும் 100 கால் மண்டபம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டன. கோவில் கிழக்கு ராஜகோபுர வாசல் 150 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு புதிய வாசல் கதவுகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளன.
அதுமட்டும் அல்லாமல் மூலவர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டுள்ளன. திருப்பணிக்கான மொத்த மதிப்பீடு சுமார் ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததாகவும் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை 5-ந்தேதி நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று 5-ந்தேதி காலை 11 மணிக்கு உலகப்பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் (ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்) வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பாபிஷேக அங்குரார்ப்பணம் நடந்தது. 2-ந்தேதி முதல் 5ந்தேதி வரை 4 நாட்களுக்கு யாகசாலை பூஜைகள் நடந்தன. பூஜையில் அமிர்தவள்ளி தாயார் எம்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புரணாஹுதி தீர்த்தம் சடாரி 81 கலச திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு 4-ம் நாள் யாகசாலை பூஜை தொடங்கியது. ஸ்ரீபெருமாள் நித்யபடி திருவாராதனம் நிவேதனம் நடந்தது. 8 மணிக்கு ஸ்ரீபெருமாள் ஸ்ரீதாயார் யாகசாலைக்கு எழுந்தருளினர். அங்கு துவார கும்ப மண்டல திருவாராதனம் நிவேதனம், பெருமாள் திருவாராதனம் ஹோமங்கள் நடந்தன. 10.30 மணிக்கு மஹா பூரணாஹுதி யாத்ராதானம் கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேற்கு ராஜ கோபுரம் கிழக்கு ராஜ கோபுரம் தாயார் தங்க விமானம் புண்ணியக்கோட்டி விமானம் 100 கால் மண்டபம் மூலவர் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதி தொண்டரடி பொடியாழ்வார் பிரகாரம் பல சிறிய சன்னிதிகள் பிரகாரங்கள் விமானங்கள் மீது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி அர்ச்சகர்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அப்பொது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சி வரதா... காஞ்சி வரதா... கோவிந்தா... கோவிந்தா...' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர். கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பெருமாள் தாயாருடன் கண்ணாடி அறையில் எழுந்தருளினார். அங்கு திருவாராதனம் நிவேதனம் வேதப்ரபந்த சாத்துமறை தீர்த்தம் சடாரி கோஷ்டி ஆகியவை நடந்தன. மாலையில் கோவில் மாட வீதிகளில் பெருமாள் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து இரவு பெருமாள் திருமலைக்கும் தாயார் சன்னதிக்கும் எழுந்தருளினர்.
ஸ்ரீஅஹோபில மடம் செலவு ஏற்பு!
கும்பாபிஷேகத்திற்கான அனைத்து செலவுகளையும் ஸ்ரீஅஹோபில மடம் 45-வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீநாராயண யதீந்திர மகா தேசிகன் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர ஸ்ரீலஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகாசேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. உத்திரமேரூர் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் பா.கணேசன், மத்திய எஃக்கு வாரிய உறுப்பினர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ஸ்ரீஅஹோபில மடம் 45வது பட்ட ஜீயரின் பேரன்கள் சேஷாத்திரி சம்பத் வரதராஜன் வக்கீல்கள் வாசுதேவன் ரேவதி, அதிமுக நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், எஸ்.ரங்கநாதன், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.வள்ளிநாயகம், அத்திவாக்கம் எஸ்.ரமேஷ், ராஜசிம்மன், தென்னேரி என்.எம்.வரதராஜுலு, படுநெல்லி வி.தயாளன், தொழிலதிபர்கள் எம்.வி.எம்.பி.அப்பர், வி.கே.தாமோதரன், ஆர்.சரவணன், ஆர்.கணேஷ், வி.பன்னீர்செல்வம், கவிஞர்.கூரம்.துரை, மெடிக்கல்.பி.தீனா, கே.வீரராகவன், கோவில் நிர்வாக அதிகாரிகள் பு.மு.வேதமூர்த்தி, கண்ணபிரான் வேலரசு வி.கே.சரவணன் உள்பட திரளான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் ப.ராஜா காஞ்சீபுரம் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான என்.தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் நன்கொடையாளர்கள் பக்தர்கள் வெகு விமர்சையாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) கணேசமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் ஆகியோர் தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு வி.பாஸ்கரன், துணை சூப்பிரண்டு வி.சந்திரசேகரன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் வேலூர் ஆகிய 6 மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உள்ளூர் அரசு விடுமுறை!
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று (5.7.12) ஒரு நாள் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 14ந்தேதி பணி நாளாக அறிவித்து கலெக்டர் ஹனீஷ்சாப்ரா உத்தரவிட்டிருந்தார்.
உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தது. ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அர்ச்சகர்களை கொட்டிய தேனீக்கள்:
வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பழமைவாய்ந்த கிழக்கு ராஜ கோபுர (பின்பக்க கோபுரம்) கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்வதற்காக அர்ச்சகர்கள் தேவராஜன் சேஷாத்திரி ஆகியோர் புனித நீர் கொண்ட கலச கும்பங்களை தூக்கிக் கொண்டு கிழக்கு ராஜ கோபுரத்தின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோபுரத்தின் 5-வது நிலை உள்பகுதியில் இருந்த தேனீக்கள் அர்ச்சகர்களை பயங்கரமாக கொட்டியது. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் அர்ச்சகர்கள் கோபுரத்தின் மீது ஏறி கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பிறகு கீழே இறங்கி வந்த அவர்கள் தங்களை தேனீக்கள் கொட்டியது குறித்து சக அர்ச்சகர்களிடமும் உதவி ஆணையர் வீ.சுந்தரமூர்த்தியிடமும் தெரிவித்தனர். பிறகு அவர்கள் மருத்துவ குழுவினரிடம் சிகிச்சை பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.