எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஆக.12 - ஹமீத் அன்சாரி நேற்று இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி பதவியை ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டுளக்ளார். அதற்கு பிறகு துணைஜனாதிபதி பதவிக்காலமும் முடிவடைந்தது. அதனையொட்டி புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனையொட்டி துணைஜனாதிபதி பதவிக்கும் போட்டி ஏற்பட்டது.
துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஏற்கனவே துணைஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரியும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் ராணுவ அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர். தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் 252 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஹமீத் அன்சாரி வெற்றிபெற்றார். பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. ஹமீத் அன்சாரிக்கு புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இதர கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஹமீத் அன்சாரி இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி பதவியை ஏற்றுள்ளார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு பிறகு ஹமீத் அன்சாரிதான் தொடர்ந்து இரண்டாவது முறையாக துணைஜனாதிபதி பதவியை ஏற்றுள்ளார். பதவி ஏற்பதற்கு முன்பு காந்தி சமாதிக்கு அன்சாரி சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து துணைஜனாதிபதியாக அன்சாரி இருந்து வருகிறார். சிறந்த கல்விமான். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் மற்றும் பல நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி உள்ளார். ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி உள்ளார். தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


