முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா பானர்ஜியிடம் கேள்வி கேட்டவருக்கு சிறைவாசம்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஆக. - 13 - மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் பேல்பஹாரி என்ற இடத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி,  அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமானால் கேளுங்கள் என்று கூறினார். இதையடுத்து அந்தக் கூட்டத்தில் இருந்த சிலாதித்யா செளத்ரி என்ற விவசாயி, நீங்க ஆட்சிக்கு வந்து விவசாயிகளுக்காக என்ன செஞ்சீங்க... விவசாயிகள் பணம் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.. சும்மா வெறும் வாக்குறுதி மட்டும் கொடுத்து பிரயோஜனமில்லை என்று கூறினாராம். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மமதா பானர்ஜி ஆத்திரத்தின் உச்சத்துக்குப் போய்விட்டதுடன் அவரை மாவோயிஸ்ட் என்ற் முத்திரை குத்தி கோபமாக பேசியிருக்கிறார். இதையடுத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அந்த விவசாயியை முதலமைச்சரின் கூட்டத்தில் இடையூறு செய்த குற்றத்துக்காக போலீசார் கைது செய்து விட்டார்களாம். இது எப்படி இருக்கு!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்