எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.13 - தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மிகவும் பதட்டமான 26 தொகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம் முறைகேடுகளை தடுக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 2773 வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோர் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், பா.ஜ.க.தலைவர்கள் அத்வானி, நிதின்கட்காரி, சுஷ்மாசுவராஜ், அருண் ஜேட்லி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ்காரத், பிருந்தா காரத், டி.ராஜா, ஏ.பி.பரதன் ஆகியோர் தமிழகம் வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார்கள். நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டு போடலாம். வாக்காளர்கள் பயமின்றி சுதந்திரமாக வந்து வாக்களிக்க பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் 100 சதவீதம் கச்சிதமாக செய்து முடித்து விட்டது. வாக்கு சாவடிகளுக்கு தேவையான மின்னணு எந்திரம், அடையாள மை, மற்றும் எழுது பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டார்.
சென்னை நகரில் நடைபெறும் தேர்தல் குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் 3236 பூத்துகள் உள்ளன. 266 மண்டலங்களாக இவைகள் பிரிக்கப்படும். 1 மண்டலத்திற்கு 1 அதிகாரி பொறுப்பாக இருப்பார். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. இரவு பகலாக அதிகாரிகள் டூட்டியில் இருப்பார்கள். வாக்குப் பதிவு முடிந்து இரவு மின்னணு எந்திரங்களை அனுப்பும் வரை டூட்டியில் இருப்பார்கள் என்றார்.
வாக்குசாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று இரவுக்குள் போய் சேர்ந்து விடும். எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. 1100 வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள் 500 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அந்த போனில்தான் அவர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று மாலை தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இன்று ஓட்டுப்பதிவுக்கு தேவையான இதர பொருட்களை பெற்றுக் கொண்டு, இன்றே ஓட்டுச்சாவடிக்கு சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப்காமிரா மூலம் படம் பிடித்து இணையத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப் பதிவு முழுமையாக படம் பிடிக்கப்படும். இவை தவிர சுமார் 13 ஆயிரம் தேர்தல் பார்வையாளர்கள் ரோந்து சுற்றி வந்து ஓட்டுப்பதிவை கண்காணிப்பார்கள். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாநில போலீசாருடன் சுமார் 25 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். முக்கிய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்களில் வரதடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் நபர்களால் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்க நேற்றிரவு முதல் திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூக நலக் கூடங்களில் சோதனை நடந்து வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்று வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு நூதனமான வழிகளில் பணம்பட்டு வாடா செய்யப்பட்டு விடலாம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வாரி, வாரி வழங்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. என்றாலும் குறிப்பிட்ட 26 தொகுதிகளில் பணம் பட்டுவாடா மிக, மிக அதிக அளவில் நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் கள் வந்துள்ளன. இந்த 26 தொகுதிகளிலும் இன்றிரவு பணபட்டுவாடா தீவிரமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த 26 தொகுதிகளிலும் கூடுதல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆதாரப்nullர்வமாக தகவல்கள் தரும் பட்சத்தில் தேர்தலை ரத்து செய்யவோ, அல்லது தேர்தலை ஒத்தி வைக்கவோ உயர் அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 26 தொகுதிகளும் எவைஎவை என்ற தகவலை தெரிவிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். சென்னையில் கொளத்தூர் தொகுதி இந்த கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் மொத்தம் 4.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 லட்சம் பேர் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள். இவர்களில் சுமார் 50 லட்சம் பேர் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள nullத்சிலிப் இரண்டில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். பெரும்பாலான வாக்காளர்களுக்கு nullத் சிலிப் கொடுக்கப்பட்டு விட்டது. nullத்சிலிப் கிடைக்காதவர்கள் ஓட்டுச்சாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் அனைவரும் இன்றே தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாளை மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவ டையும். அதன் பிறகு மின் னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். அடுத்த மாதம் (மே) 13ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.