முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர்கள் மறைவு: முதலமைச்சர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.6 - அ.தி.மு.க. பிரமுகர்கள் நான்கு பேர் மறைவுக்கு தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடலூர் கிழக்கு மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக்குழு 18-வது வார்டு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம், திருவாரூர் மாவட்டம், பேரளம் பேரூராட்சி மன்ற 10-வது வார்டு உறுப்பினர் க.கர்ணன், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம், கரடிப்பட்டி ஊராட்சி, ஆலம்பட்டி கிளைக்கழகச் செயலாளர் என்.வீரணன், வாடிப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு கழகச்செயலாளர் க.முத்து ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர்கள் ராஜாங்கம், கர்ணன், வீரணன் மற்றும் முத்து ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்