எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.27 - ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை தருவதற்கு வசதியாக, முதலமைச்சர் கருணாநிதி தானே முன்வந்து பதவி விலக வேண்டும், அல்லது இந்திய அரசு தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக அதன் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.
ஒவ்வொரு முறையும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இடைநீnullக்கம் செய்வதும், அதற்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆயின என்பதும் இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதாகி இறந்துள்ளார்களே தவிர, தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றதாக வரலாறு இல்லை.
சான்றாக 1991-1996 வரை தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராமின் படுக்கையிலிருந்து பல கோடி ரூபாய்கள் பணமாகவே கைப்பற்றப்பட்டு, வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு, அந்த தண்டனையையும் எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். இன்னும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு தற்போது 84 வயதாகிறது. அதைப் போல் ஆகிவிடக் கூடாது. அந்த அளவுக்கு ஊழல் வழக்குகளில் காலதாமதம் நீnullடிப்பதுதான் வரலாறு.
ஊழல் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஊழல் செய்து அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் உடனடியாக இந்திய அரசு முடக்கி வைக்க வேண்டும். தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றால் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வருமான வரி சோதனை என்றால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்கு இத்தகைய உடனடி தண்டனையை வழங்குகிற மத்திய, மாநில அரசுகள் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளிலும், நிலங்களிலும், கட்டிடங்களிலும், கம்பெனி பங்குகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் போட்டு வைத்திருப்பதை உடனடியாக ஏன் முடக்கக் கூடாது என்பதே எனது கேள்வி.
அவற்றை அப்படியே விட்டு வைப்பதால் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு பெரிய பெரிய வக்கீல்களை நியமித்து வழக்குகளில் காலதாமதம் செய்கின்றனர் அல்லது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்குகளை முடக்கிப் போடுகின்றனர். அந்த ஊழல் பணத்தை வைத்து தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றனர். ஜனநாயகமே ஊழல்நாயகமாக ஆகிவிடுவதை இந்திய அரசு ஏன் தடுக்கவில்லை.
ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை தந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய மந்திரியாக இருந்த ராஜா மீது மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. மத்திய மந்திரி பதவியில் அவர் தொடர்ந்து இருந்தால் அவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி புலன் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்த முடியும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர். ஆகவே வேறு வழியின்றி மத்திய மந்திரி பதவியில் இருந்து ராஜா விலக நேர்ந்தது. இன்று முக்கிய குற்றவாளியாக டெல்லியில் திகார் சிறையில் இருக்கிறார்.
இந்த ஊழல் பணத்தில் ரூபாய் 214 கோடி கலைஞர் டிவி ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மத்திய புலனாய்வுத் துறை நேற்றைய தினம் உச்சnullநீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., இதில் கூட்டுச் சதியாளர் என்று கூறப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் 2வது மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவியில் 60 சதவிகிதப் பங்கு வகித்தும் கூட அவரை மத்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டில் சேர்க்கவில்லை. அவரை இயங்காத பங்குதாரர் என்று கூறி மத்திய புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை. 20 சதவிகிதப் பங்கினை பெற்றுள்ள கனிமொழி எம்.பி., சரத்குமார் ரெட்டி ஆகியோர் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளபோது, அதைப் போல மும்மடங்கான 60 சதவிகித பெரும்பான்மை பங்கு வகிக்கும் தயாளு அம்மையாரையும் முறைப்படி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா? சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது எல்லோருக்கும் பொதுவானதுதானே. இங்கே சட்டம் இருட்டறையில் போய் ஒளிந்து கொண்டதா?
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் எந்த அதிகார பொறுப்பிலும் இல்லை. அப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வி.க்கு அதனுடைய கடந்த கால இலாபக் கணக்கை பார்க்காமல் ரூபாய் 214 கோடி கொடுக்க முன் வந்தார்கள் என்பது கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிற கதைதான்.
ஆகவே இந்தப் பணம் மத்திய புலனாய்வுத் துறை சொல்வதைப் போல ஊழல் பணம் என்பதும், இந்தப் பணத்தை முதலமைச்சர் கருணாநிதி நேரில் கொடுத்து கலைஞர் டி.வி.யில் அவரை பங்குதாரராக முதலமைச்சர் என்ற காரணத்தால் போட முடியாததாலேயே கருணாநிதியின் பினாமியான தயாளு அம்மையாருக்கு தரப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். ஆகவே இந்தப் பண பரிமாற்றம் கருணாநிதிக்கு நேராக தரப்பட்டுள்ளது என்று கருதுவதே பொருத்தமானது.
எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் ராஜா நீnullடித்தால் இந்த இமாலய ஊழலில் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுமோ, அதே போன்று கலைஞர் டிவி மீது இந்த ரூபாய் 214 கோடி தரப்பட்டுள்ள வழக்கு பாய்வதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக nullநீடிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், ஊழல் விசாரணை தொடர்வதற்கும், ஊழல் பேர்வழிகளை கண்டறிந்து உடனடியாக தண்டனை தருவதற்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி இந்த இமாலய ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீnullதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சராக உள்ள கருணாநிதி, முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது இந்திய அரசு மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் கருத்தில் கொண்டு nullநீதியை நிலைநாட்ட கருணாநிதி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர் அன்று. பேராசையே பெரும் துன்பம் என்று நிரூபிக்கப்படுகிறது இன்று.இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.