முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா கவர்னர் மீது மோசடி வழக்கு பதிவு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புனே,ஏப்.20 - திரிபுரா மாநில கவர்னர் டி.ஒய். பாட்டில் மற்றும் அவரது மனைவி, இரண்டு மகன்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இடதுசாரி கூட்டணி ஆட்சி செய்யும் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான திரிபுராவின் கவர்னராக டி.ஒய். பாட்டீல் இருக்கிறார். 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த சம்பத் பவார் என்பவர் புனே நகரில் உள்ள தலேகான் தபதே காவல் நிலையத்திற்கு சென்று கவர்னர் பாட்டீல், அவரது மனைவி புஷ்பலதா, மகன்கள் அஜின்கியா, விஜய் ஆகியோர் மீது மோசடி புகார் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இந்த புகாரை போலீசார் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையொட்டி புனே மாவட்டத்தில் உள்ள வத்கான் மாவல் கோர்ட்டில் கடந்த செவ்வாய் அன்று சம்பத் பவார் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் கவர்னர் பாட்டீல் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். மனுவை விசாரித்த கோர்ட்டு, பாட்டீல் அவரது மனைவி புஷ்பலதா மற்றும் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் பாட்டீல், புஷ்பலதா, அஜின்கியா, விஜய் ஆகியோர்கள் மீது போலீசார் சட்டப்பிரிவு 420 (மோசடி, மற்றும் சொத்துக்களை ஒப்படைக்கும்படி வலியுறுத்தி கண்ணியக்குறைவாக நடந்துகொள்வது) -ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பான தஸ்தாவேஜூகளை ஆய்வு செய்து வருவதாகவும் அந்த காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் நிகம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்