எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, ஜூலை. 11 - மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 5 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இன்று 11 ம் தேதி தொடங்கி மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஆளும் கட்சி சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று மேற்கு வங்கத்தில் முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது.
பங்குரா, மேற்கு மிட்னபூர், குர்லியா மாவட்டங்களில் இந்த முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தம் 58 ஆயிரத்து 865 இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 6,274 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இம்மாநிலத்தில் நடக்கவுள்ள பஞ்சாயத்து தேர்தல் 17 மாவட்டங்களில் நடக்கிறது. மொத்தம் 1.7 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பெரும்பாலான பஞ்சாயத்துகள் மற்றும் ஜில்லா பரிட்சித்துகள் தற்போது இடது முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சாயத்து தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இ. கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


