எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச.25 - டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. அப்போது கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.
டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஆட்சி பற்றி ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் பற்றி ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாகப் பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பதால் ஊழல் பிரச்சனை என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மீது பெரிய ஊழல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தயாரித்து வைத்துள்ளது. ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்கிரஸ் மந்திரிகள் பெரிய நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களில் பெரியஅளவில் ஊழல் நடந்துள்ளதாக அந்த ஊழல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளதை ஆம் ஆத்மி கட்சியினர் கண்டுபிடித்துள்ளனர். மின்சாரம், குடிநீர் போன்ற துறைகளில் போலியான பில்கள் தயாரித்து முறைகேடு நடத்தியதையும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரிதலா மின் உற்பத்தி நிலையத்திலிருந்து ரூ.300 கோடிக்கு மின்சாரம் வாங்கியதாக ஒரு ஆவணம் உள்ளது. ஆனால் ரிதலா நிறுவனம் கடந்த 2010_ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தகவல் அறியும் உரிமை யைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஊழல் புரிந்துள்ளனர். இந்த ஊழல்கள் மீது விசாரணை கமிஷன் அமைத்து உவி.ய விசாரணை நடத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இது டெல்லி தலைவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


