முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை புதை குழிக்குள் 50 எலும்புக் கூடுகள்

புதன்கிழமை, 29 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜன.30 - இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழிக்குள் இருந்து இதுவரை 50 எலும்புக் கூடுகள்  தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக் கூடுகள் இலங்கையில் ராணுவத் துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது காணாமல்போன தமிழர்களுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித்ரோஹனா கூறுகையில், இந்தப் புதைகுழி குறித்து துப்பு துலக்க புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் மேலும் அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது என்றார். 

தற்போது மேலும் 3 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கண்டு பிடிக்கப்பட்ட  எலும்புக் கூடுக ளின் எண்ணிக்கை 50 ஆய உயர்ந்துள்ளது. கோர்ட் அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் குழு இக்குழிக்குள் பல அடுக்குகளாக சடலங்கள் புதைக்கப் பட்டிருப்பதாக அந்த குழு தெரிவித்துள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் திருக்கதீஸ்வரம் பகுதியில் இலங்கை அரசின் நீர்வளத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடிநீர் குழாய் இணைப்புக்காக குழி தோண்டிய போது இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. 

      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்