முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிக்கையாளர் கொலைக்கு சோனியாகாந்தி கண்டனம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூன்.- 13 - மும்பையில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையிலிருந்து வெளியாகும் மிட்டே நாளிதழில் கிரைம் செய்திகளை மூத்த பத்திரிக்கையாளர் ஜோதிர் மாயிடே என்பவர் எழுதி வந்தார். இவர் எழுதிய செய்திகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து பல முக்கிய புள்ளிகளை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிர்மாயிடே 4 மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மும்பையில் பட்டப்பகலில் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் எழுதிய செய்தியால் பாதிக்கப்பட்ட கடத்தல் கும்பல்  அவரை கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்