எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,பிப்.28 - பாராளுமன்ற லோக்சபையில் இன்று (28-ம் தேதி) திங்களன்று 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் புதிய வரிகள் இருக்காது. மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகையும் ரூ. 2 லட்சமாக உயரக்கூடும் என தெரிகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. எனப்படும் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு சம்மதித்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் அமைதியாகவே நடந்து வருகிறது. முதல் நாளன்று மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்,பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கறுப்பு பணம் ஒழிக்கப்படும்.
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் போன்ற உறுதிகளை அளித்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதிலும் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்கு கட்டணமோ உயர்த்தப்படவில்லை. இருப்பினும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் பட்ஜெட் மேற்குவங்கத்தின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கிண்டல் அடித்துள்ளது. இந்த பட்ஜெட்,சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மட்டும் இது வளர்ச்சிக்குரிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்று பாராளுமன்ற லோக்சபையில் இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வழக்கும்போல் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இந்தாண்டில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், புதுவை ,அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்காது என்றும் அப்படி இருந்தாலும் அதிகமாக இருக்காது என்று பரவலாக நம்பப்படுகிறது.
மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தற்போது ரூ. 1.6 லட்சமாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு ரூ.1.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பல சலுகைகள் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்பவர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த துறையில் ரூ.20 ஆயிரம் வரை முதலீட்டிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு தொகை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அளவு 4.7 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படலாம். நேரடி வரிவிதிப்பு விதிமுறையில் வருடாந்திரத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் வரிவிலக்கு அளிக்க நிதி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. இந்த உச்சவரம்பை மேலும் அதிகரிக்க படலாம் என்று தெரிகிறது. இந்தாண்டு விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதால் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் வகையில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. அதேசமயத்தில் மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதன் மீது விவாதம் நடைபெறும். சுமார் 2 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். சட்டசபை தேர்தல்கள் வருவதால் கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
பலூனில் பறக்கும் போது பிடித்த தீ; அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
13 Sep 2025போபால் : மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா பதவியேற்பு : பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
13 Sep 2025புதுடில்லி : நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
13 Sep 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,228 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.