எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 1 - மத்திய அரசின் பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தின் லோக் சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு: எக்சைஸ் வரி 10 சதவீதமாகவே நீடிக்கும். இதேபோல சென்வாட் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி நபர் வருமான வரி உச்சவரம்பு தற்போதுள்ள ரூ. 1.60 லட்சத்திலிருந்து ரூ. 1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ. 5 லட்சம் வரை வருமான வரி சலுகை அளிக்கப்படுகிறது.
* உள்நாட்டு கம்பெனிகளுக்கான சர்சார்ஜ் 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* சிறு வரி செலுத்துவோருக்காக சுகம் என்ற பெயரில் புதிய வருமான வரி கணக்கு படிவம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
* குறைந்தபட்ச மாற்று வரி 18 சதவீதத்திலிருந்து 18.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* சேவை வரி 10 சதவீதமாகவே நீடிக்கும்.
* மாற்றி அமைக்கப்பட்ட சுங்க மற்றும் கலால் வரிகள் மூலம் ரூ.7300 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்
* இரும்பு தாது மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* 130 பொருட்களுக்கு 1 சதவீத மத்திய எக்சைஸ் வரி தொடர்ந்து நீடிக்கும்.
* அத்யாவசிய உணவு பொருட்கள், எரிபொருள், விலை உயர்ந்த கற்கள், தங்க, வெள்ளி ஆபரணங்கள் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
* விவசாய இயந்திரங்களுக்கான கஸ்டம்ஸ் வரி 5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* அறைக்கு ஒரு நாள் வாடகை ரூ. 1000 வசூலிக்கும் ஓட்டல்கள் சேவை வரிக்குள் கொண்டு வரப்படும். மதுபானம் பரிமாறும் ஏ.சி.ரெஸ்டாரண்டுகள்,சில குறிப்பிட்ட மருத்துவ மனைகள், சில நோய் கண்டறியும் சோதனைகள் ஆகியவையும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
* உள்நாட்டு விமான பயண டிக்கெட்டுகளுக்கு ரூ. 50 ம் சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.250 ம் சேவை வரி உயர்த்தப்படுகிறது.
* உயர் வகுப்பு விமான டிக்கெட்டுகளுக்கு (உள் நாடு மற்றம் வெளி நாடு ) 10 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும்.
மானியங்கள்:
* உணவு மானியங்களுக்கு ரூ. 60,570 கோடி .
* உரத்திற்கு ரூ.50,000 கோடி.
* பெட்ரோலிய பொருட்களுக்கான மானியம் ரூ.23,640 கோடி.
* எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி ரொக்க மானியம்.
* 2011-12 ம் ஆண்டிற்கான மொத்தச் செலவு 12.55 லட்சம் கோடி
* இதில் திட்டச் செலவுகள் 4.48 லட்சம் கோடி
வருமானம்
* ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ. 9.32 லட்சம் கோடி
* வரி அல்லாத வருமானம் ரூ.1.25 லட்சம் கோடி
* கம்பெனி வரிகள் மூலமாக வருவாய் ரூ. 3.6 லட்சம் கோடி.
பங்கு விலக்கல்
* 2011-12 ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கு ரூ. 40,000 கோடியாக இருக்கும்.
* பொதுத்துறை நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
* மொத்த கடன்கள் ரூ. 3.45 லட்சம் கோடியாக இருந்தது தற்போது ரூ. 3.43 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
* அன்னிய நேரடி முதலீடு கொள்கை தளர்த்தப்படுகிறது.
* உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரி இல்லாத பத்திரங்கள் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு வெளியிடப்படும்.
* இந்த ஆண்டு உணவு பாதுகாப்பு குறித்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாகும்.
* கடன் மேலாண்மை அலுவலகம் ஒன்று அமைக்கப்படும்.
* பொது கடன் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்.
* காப்பீட்டு ஓய்வூதிய நிதியங்கள் தொடர்பான மசோதாக்கள் பார்லியில் தாக்கல் செய்யப்படும்.
* புதிய கம்பெனிகள் மசோதா, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
* 2011-12 ஆம் ஆண்டுக்கு ராணுவ செலவுகளுக்காக ரூ. 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி ரூ. 18 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மாநில அரசுகளால் நடத்தப்படும் வங்கிகளுக்கு ரூ. 20,150 கோடி வழங்கப்படும்.
* கல்வித்துறைக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி ரூ.26,760 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தேசிய திறன்மேம்பாட்டிற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு ரூ.54 கோடி ஒதுக்கீடு.
* பாரத் நிர்மான் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 58 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான சம்பளம் உயர்த்தப்படும்.
* சமூக நலத் திட்டங்களுக்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.