LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம், ஆக.14 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள கடைசி பி நிலவறையை திறப்பதற்கு மன்னர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொற்குவியலை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடைசியாக பி அறையைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மன்னர் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பி அறையை திறப்பதற்கு முன்பு தேவ பிரசன்னம் நடத்த முக்கியஸ்தர்களால் முடிவு செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷங்கலை மதிப்பீடு செய்யக்கூடாது என்றும் பி நிலவறையை திறக்கக்கூடாது என்றும் பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை மீறி நடப்பவர்களின் வம்சமே விஷ ஜந்துக்களால் கடிக்கப்பட்டு அழிந்துவிடும் என்றும் எச்சரித்தனர். இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழுவின் தலைவர் ஆனந்தபோஸ் தலைமையில் வருகிற 25 ம் தேதி திருவனந்தபுரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் பொக்கிஷங்களை மதிப்பிடுவது, நிலவறையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் மன்னர் குடும்பத்தின் கடைசி வாரிசான உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா, ராமவர்மா ஆகியோர் பி நிலவறையை திறப்பதற்கு தொடர்ந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொற்குவியலை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பதற்கும் அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேவ பிரசன்னத்தில் ஜோதிடர்கள் கூறியபடிதான் நடந்துகொள்ள வேண்டும். பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தேவபிரசன்னம் ஆச்சார விதிகளுக்கு எதிரானது என்று மடாதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள முஞ்சறை மடத்து தந்திரிகள் இதுகுறித்து கூறுகையில், எங்கள் மடத்தின் தந்திரியான புஷ்பாஞ்சலி தந்திரியிடம் தேவபிரசன்னம் பார்ப்பதற்கு முன்னால் அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஆனால் யாரும் முறையாக அனுமதி கேட்கவில்லை. மேலும் எங்கள் மடத்தின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. இதுகுறித்து மன்னர் குடும்பத்திடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் முஞ்சறை தந்திரி மடத்தின் புஷ்பாஞ்சலி தந்திரிதான் சிறப்பு பூஜைகளை நடத்திவந்தார். காலப்போக்கில் அதுவும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை எடுத்து கணக்கிடும்பணி துவங்கியது. நியாயமாகப் பார்த்தால் முன்னதாகவே தேவ பிரசன்னம் பார்த்திருக்க வேண்டும். ஆனால் தற்போது பி நிலவறையை திறப்பதற்கு முன்புதான் எங்களிடமும் அனுமதி பெறாமல் தேவப்பிரசன்னமும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர அவசரமாக ஜோதிடம் பார்க்காமலேயே இந்த பிரசன்னம் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 அறைகளையும் ஆச்சார விதிகள் பின்பற்றப்படாமலும், பூஜைகள் எதுவும் நடத்தப்படாமலும் திறக்கப்பட்டுள்ளது. இதுவும் நாட்டுக்கு பெரும் கேடுதான். இதை உணராமல் தேவ பிரசன்னம் ஆச்சார விதிகளை கடைப்பிடிக்காமல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 1 day 6 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 8 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 12 hours ago |
-
கல்வி, மருத்துவ திட்டங்களை இலவசம் என சொல்ல முடியாது: அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
13 Aug 2022சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
-
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது
13 Aug 2022நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி கோலாகலம்: தமிழகத்தில் ஏராளமானோர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினார்கள்
13 Aug 2022தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
-
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை உடனே கைவிட வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Aug 2022சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
-
சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது : கண் பார்வை இழக்க நேரிட்டதாக தகவல்
13 Aug 2022நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்கனில் தலிபான்களின் தடையை மீறி சகோதரியுடன் இணைந்து ரகசிய பள்ளி நடத்தும் பெண்
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
-
சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு அமைப்பு
13 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை கலைவாணர் அரங்கில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
13 Aug 2022சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
-
2 ராணுவ விமானங்களை இலங்கைக்கு பரிசாக வழங்குகிறது இந்தியா
13 Aug 2022புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
-
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனிக்கு மாநில இளைஞர் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
13 Aug 2022முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
பிரியங்காவைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
13 Aug 2022காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
-
போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு எடப்பாடி வேண்டுகோள்
13 Aug 2022சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
-
ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: தலிபான் மதகுரு பலி
13 Aug 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
-
விடுமுறையால் அலைமோதும் கூட்டம்: திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
13 Aug 2022அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
-
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை
13 Aug 2022சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
-
பிரதமரிடம் இருந்து ஊக்கம் கிடைப்பது முக்கியமானது : கேப்டன் ஹர்மன்ப்ரீத் கருத்து
13 Aug 2022புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
-
உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
13 Aug 2022பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்: அமைச்சர்கள், மதுரை மாவட்ட கலெக்டர் இறுதி மரியாதை
13 Aug 2022காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
வெளிநாடு டி-20 போட்டி தொடரில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை : பி.சி.சி.ஐ. அதிரடி அறிவிப்பு
13 Aug 2022புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
-
தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் டோனி
13 Aug 2022நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்
13 Aug 2022சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
13 Aug 2022சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
-
நாடு முழுவதும் நாளை 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு: தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் குவிப்பு
13 Aug 202275-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு பதிவு
13 Aug 2022சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது.
-
கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
13 Aug 2022சென்னை : கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.