எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.19 - ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் உலக தொழில் மையமாக மாற்றப்படும் என்றும், இந்த துறையில் தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. உறுப்பினர் பாண்டியராஜன் பேசும் போது, தொழில்துறைக்கு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் 1.7 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர், தற்போது நடைபெற்று வருவது மானியக் கோரிக்கை மீதான விவாதம் மட்டுமே. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் அல்ல. தொழில்துறையை சேர்ந்தவர்கள் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.
இதற்கு பதிலளித்த பாண்டியராஜன், போர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் முதலில் தமிழகத்தில்தான் தொழிற்சாலைகளை தொடங்கின. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக போர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய தொழிற்சாலைகள் குஜராத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர்,
பேரவை உறுப்பினர் குஜராஜ், மகராஷ்டிரம் போன்ற மாநிலங்களை தெரிந்து வைத்துள்ள அளவுக்கு தமிழ்நாடு குறித்து தெரிந்து வைத்திருக்கவில்லை. போர்டு, நிஸ்ஸான், பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன. ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. வரும் 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் உலக தொழில்மையமாக தமிழகம் மாற்றப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


