LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, செப்.8 - டெல்லி ஐகோர்ட்டு நுழை வாயில் அருகே நேற்று பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டெல்லி ஐகோர்ட்டு பகுதியில் நேற்று காலை வழக்கமான பணிகள் துவங்குவதற்கு முன்பாக வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுக்களை பெற்று 5-வது நுழைவாயில் வழியாக உள்ளே சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 10.15 மணிக்கு 5-வது நுழைவாயில் அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
அதிக சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் தீ அணைப்பு படையினர், போலீஸ் படையினர், மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டு வெடித்த பகுதியில் மனிதர்களின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் சிதறி கிடந்தன. ஒரே ரத்தக் காடாக அந்த இடம் காட்சி அளித்தது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்பு படையினர் உடனுக்குடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் டெல்லி போலீஸ் கமிஷனர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டார். ஐகோர்ட்டில் நேற்று பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. குண்டு வெடித்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இது தீவிரவாதிகள் நடத்திய சம்பவம்தான் என்பதை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் உறுதி செய்தார்.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படை, தேசிய உளவுத்துறை மற்றும் தடயவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்களைக் கொண்டு வேறு இடங்களில் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்குகளில் தொடர்புடைய வர்கள்தான் அதிகமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல்குருவை விடுதலை செய்யாவிட்டால் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று அந்த தீவிரவாத குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனை, அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மருத்துவ மனை ( எய்ம்ஸ்) ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலரது நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
குண்டு வெடிப்பு நடந்த இடம் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச்சீட்டுகளை வரிசையில் நின்று பெறுவதற்கான இடம் என்பதால் அங்கு அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அனுமதிச்சீட்டு வழங்கும் வரவேற்பு அறை அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேசில்தான் வெடி குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்தை யாரும் நெருங்காதபடி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 25 ம் தேதி இதே ஐகோர்ட்டுக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஆனால் அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது இரண்டாவதாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குண்டு வெடித்தபோது மக்கள் இடையே பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். குண்டு வெடித்த பகுதியில் கரும் புகை சூழ்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் பலர் துடித்துக்கொண்டிருந்ததை தங்களால் பார்க்க முடிந்தது என்றும் அவர்கள் கூறினர். படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க அவர்களது உறவினர்கள் அந்த மருத்துவ மனைகளின் முன்பு கூட்டமாக கூடி கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 26 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 23 hours ago |
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
குறைந்த காற்றின் வேகம் குறைந்தது: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு
17 Aug 2022சென்னை : குறைந்த காற்றின் வேகம் குறைந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு
17 Aug 2022இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
-
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் : கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு
17 Aug 2022சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
புதிதாக 9,062 பேருக்கு தொற்று: இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
17 Aug 2022இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
17 Aug 2022டெல்லி : உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடத்த முயற்சி எடுங்கள் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
-
உலகின் ஆறு சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு
17 Aug 2022பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
-
காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம்: நாக் கமிட்டி
17 Aug 2022கோவை : காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.
-
பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் : விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
17 Aug 2022புதுடெல்லி : கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
3 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம்: முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரீட்சை
17 Aug 2022ஹாராரே : இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் இன்று ஆன்லைனில் வெளியீடு
17 Aug 2022திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
-
பொதுக்குழு விவகாரத்தில் ஐகோர்ட் தீர்ப்பு: அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
17 Aug 2022அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்கள் உடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
-
தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானை சிக்கியது
17 Aug 2022கோவை : தமிழக - கேரள எல்லையில் 2 நாட்களாக தேடப்பட்ட காட்டு யானையை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
-
கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
17 Aug 2022மும்பை : தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
இரு உலகக் கோப்பைகளை வெல்ல ரஸ்ஸல் விருப்பம்
17 Aug 2022சமீபத்திய மே.இ. தீவுகள் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களில் பிரபல வீரர் ரஸ்ஸல் இடம்பெறவில்லை.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை அழைப்பை ஏற்க இ.பி.எஸ். மறுப்பு
18 Aug 2022சென்னை: ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
உலகத்தில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம்
18 Aug 2022புதுடெல்லி: உலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை ஹெல்த் எஃபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.
-
அரசமைப்புக்கு மீறி சொல்லும் அறிவுரைகள் தேவையில்லை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் பேச்சு
18 Aug 2022சென்னை: அரசமைப்புக்கு மீறி சொல்லும் அறிவுரைகள் தேவையில்லை என்றும், நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம் எனவும், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோத
-
தேச நலனுக்கு எதிராக கருத்து: 8 யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு
18 Aug 2022புதுடெல்லி: தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.