எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, செப்.24 - அண்ணா வழியில் ஜெயலலிதா தலைமையில் மத்திய அரசு பறித்த உரிமைகளை மீட்போம் என்று மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் 103 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது:-
முதல்வரின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட அரசியல் வரலாற்றில் அண்ணா ஒரு அத்தியாயம். தனது இறுதி மூச்சுவரை தமிழினத்திற்கு வழிகாட்டியாக, தமிழ்மொழி வளர்ச்சிக்கு காரணமாக, தமிழினத்திற்கு பாதுகாப்பாக விளங்கியவர் அண்ணா. இதனைத் தொலைநோக்கு பார்வையில் எண்ணிப்பார்த்த நமது தலைவர் எம்.ஜி.ஆர். அவருடைய உருவத்தை கழகக் கொடியில் இணைத்தார். பெயரை கட்சியிலும் இணைத்தார். அண்ணாவுக்கு நிரந்தர புகழாரம் சூட்டியவர் எம்.ஜி.ஆர்.
அண்ணா 1909 செப்டம்பர் திங்கள் 15 ம் நாள் வரலாற்று புகழ்மிக்க காஞ்சியில் பிறந்து காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் முடித்தார். 1929 ல் தமது 20 வது வயதில் செங்கல்பட்டில் நடைபெற்ற பெரியாரின் சுயமரியாதை மாநில மாநாட்டில் பார்வையாளராக கலந்துகொண்டார் அண்ணா. 1935 ல் திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டில் முதன்முதலாக தந்தை பெரியாரை சந்தித்து பேசிய அண்ணா, தாம் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்தான் என்று கூறினார். 1939 ல் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் அண்ணா பொதுச் செயலாளராகவும் ஆனார்கள். 1944 ல் சேலம் மாநாட்டில் அண்ணா கொண்டுவந்த தீர்மான அடிப்படையில் நீதிக்கட்சி திராவிடர் கழகமானது. உலக வரலாறு மற்றும் அரசியலைப் பற்றி கற்றறிந்த அண்ணா, அரசியல் அதிகாரத்தை பெற்றால்தான் தந்தை பெரியாரின் கொள்களைகளை நிறைவேற்ற முடியும் என்றும் அத்தோடு ஏழை எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டுவர முடியும் எனும் ஆழமான கருத்தை தனது இதயத்தில் கொண்டிருந்த அண்ணா, புதிய இயக்கமான தி.மு.க.வை 1949 ல் துவக்கினார்.
தனது இயக்கத்திற்கு தலைவர் பதவி காலியிடமாகவே இருக்கும் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் அதனை காலியிடமாகவே வைத்திருந்தார் அண்ணா. ஆனால் திராவிட இயக்கத்தின் கரும்புள்ளியான கருணாநிதி, முதல் அமைச்சர் ஆன பிறகு கட்சி தலைவர் பதவியையும் எடுத்துக்கொண்டார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தாரை கருணாநிதி எட்டிப்பார்க்கவில்லை. எனவே கருணாநிதிக்கு அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட எந்த தகுதியும் இல்லை. அண்ணாவுக்கும் நமது முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இயற்கையான பல அரசியல் ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். இருவருக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கை எண் 185. 1962 ல் அண்ணாவின் கன்னிப்பேச்சை கேட்ட பிரதமர் நேரு, அண்ணாவைப் பாராட்டியதுபோல மாநிலங்களவையில் ஜெயலலிதாவின் சரளமான ஆங்கிலப்பேச்சைக் கேட்ட இந்திரா காந்தி அவரை பெரிதும் பாராட்டினார்.
அண்ணா மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் தேவை என்று வலியுறுத்தினார். திட்டங்களைப் பெற்று வளர்ச்சி பெறுவதில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று மத்திய ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்டி பேசினார். அதைப்போல மேலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்பதையும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளான பெரியாறு அணை பிரச்சனை, கச்சத்தீவை திரும்பப் பெறும் பிரச்சனை போன்றவற்றில் போர்க்குரல் எழுப்பி, மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர் நமது ஜெயலலிதா. தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், மீனவர் பிரச்சனையிலும், ஈழத் தமிழர் பிரச்சனையிலும் பாராமுகமாய் இருந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிற மத்திய காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை கைவிட வேண்டும் என்று முதல்வர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும்போது பர்மாவையும், இலங்கையையும் தனி நாடுகளாக பிரித்துக் கொடுத்தார்கள். இலங்கையை சிங்களர் வசம் ஒப்படைத்தார்கள். சிங்கள அரசு புதிய அரசமைப்பு சட்டம் கொண்டுவந்தது. இதன்மூலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு இருந்துவந்த அடிப்படை உரிமைகள், கல்வி உரிமை, மத உரிமை மற்றும் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஈழத்தந்தை சிவா பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக அகிம்சை வழியில் 25 ஆண்டுகாலம் போராடியும் எந்த பயனும் இல்லாததால், போராளிக் குழுக்கள் போராட்டங்களை நடத்தின. இலங்கையின் குடியரசு தலைவராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஈழத் தமிழர்களின் மொழி உரிமையை பறித்தபோது தமிழக முதல்வராக இருந்த அண்ணா, ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டுமென வலியுறுத்தி அதன் பொதுச் செயலாளருக்கு தந்தி அனுப்பினார். ஈழத் தமிழர் உரிமை மீட்க எம்.ஜி.ஆர். கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நிதியுதவி வாங்கித் தந்தும், போராளிகள் உரிய பயிற்சி பெறவும் உதவினார். ஈழத் தமிழர்களை கொன்று குவித்து தமிழினப் படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜ பக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், உலக நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். கச்சத்தீவை திரும்பப் பெறவும் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி உள்ளார். சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சித்த கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய அரசு இந்திய தூதர் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தம்மைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் இலங்கை அரசுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அரசை வலியுறுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். அதற்கு பயனும் கிடைத்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய ஜனாதிபதி மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா, ஒரு சாதாரண ஏழை, உழைக்கும் மக்கள், விவசாய பெருமக்கள் எல்லாம் அரசியல் அதிகாரம் பெற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக மத்திய மாநில அமைச்சர் பெருமக்களாகவும் வருவதற்கு அடித்தளம் வகுத்தவர் பெருந்தகை அண்ணா. அண்ணா, எம்.ஜி.ஆர். வழியில் தமிழக மக்களின் நலன்காக்கவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவரவும் அல்லும் பகலும் கண் துஞ்சாது உழைத்துவரும் தமிழ்நாட்டின் பொற்கால முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் கரத்தை வலுப்படுத்துவோம். என்றென்றும் ஜெயலலிதாவின் தலைமையில் அண்ணாவின் கொள்கை வழி நடப்போம். மத்திய அரசு பறித்த உரிமைகளை மீட்போம்.
இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறி அடித்து ஓட்டம்
18 Sep 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
-
தலைவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
18 Sep 2025சென்னை, த.வெ.க. பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கில் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Sep 2025புதுடெல்லி, வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வயநாட்டில் பிரியங்கா காந்தி
18 Sep 2025வயநாடு: வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காசாவுக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை
18 Sep 2025ஜெருசலேம்: காசா நகருக்குள் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதால் அங்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.