எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.17 - இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக்கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து முறையிட அனைத்து கட்சி குழு ஒன்றை தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான வெள்ளச்சாமி, கணேசன், பன்னீர், முத்துக்குமார், தீர்ப்புக்கனி, ஜெயபால் ஆகியோருக்கும், அதற்கு முன்னர் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மண்டலமாணிக்கம், பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனிகுமாருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது. அத்துடன் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவத்துக்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீnullக்கம் செய்ய வேண்டும் எனவும், அத்துடன் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், படுகொலையானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலைச்சிறுத்தைகள் அனைவருக்கும் இந்த மாநிலச் செயற்குழு மனமார்ந்த வாழ்த்துகளயும், பாராட்டுகளயும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்களபெளத்த பேரினவாத ஆட்சியாளர்களுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நார்வே அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஈழச் சிக்கலில் அரசியல்ரீதியான தீர்வு காண்பதற்கு இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதிலேயே முனைப்பாக செயல்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் இனத்திற்கும், தமிழீழத்திற்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்திய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை உறுதிப்படுத்தியுள்ள நார்வே அரசின் அறிக்கை தொடர்பாக, இந்திய அரசு அனைத்துலக சமூகத்திற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
சிங்கள இனவெறிக் காடையர்களால் தமிழக மீனவர்கள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் நீnullடித்து வருகிறது. அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராஜபக்சேவும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடிய பின்னரும் சிங்களப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் தொடர்ச்சியான காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து முறையிடுவதற்கு தமிழக அரசு அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான கொலைத் தண்டனையை விலக்குவதற்கு தமிழக அரசு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலச் செயற்குழு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து அவ்வணுமின் உலைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டுமெனவும் ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வருகிற அணுமின் உலைகளையும் விரைந்து மூட வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
15 Sep 2025பியாங்காங் : அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 அரிய வகை விலங்குகள் மீட்பு..!
15 Sep 2025மும்பை, தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 வகை அரிய விலங்குகளை விமான நிலைய அதிகாரிகள் மீட்டனர்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
2026 டிசம்பர் முதல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
15 Sep 2025குமரி : குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.