முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ விபத்தில் மரணமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.15 - தீவிபத்தில் மரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், ஆதம்பாக்கம் கிராமம், வ.உ.சி. நகரில் 8.12.2011 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் கண்ணன் என்பவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 11.12.2011 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.           

இவ்விபத்தில் அகால மரணமடைந்த கண்ணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தத்  துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கண்ணன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்  வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.    

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago