எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி, ஜன.6 - திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பழமையானதும் nullலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா ஆகும். இவ்விழா கடந்த மாதம் 25ம் தேதி பகல் பத்து திருநாள் துவங்கி அன்றிலிருந்து பல்வேறு அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் முக்கிய அலங்காரம் மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட பெருமாள் பகல்பத்து மண்டபம் சென்றார். அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்தன. பொது சேவை முடிந்து புறப்பட்ட பெருமாள் 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. சொர்க்க வாசலுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக மாலையில் இருந்தே பக்தர்கள் கார்த்திகை கோபுர வாசல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிக்குள் காத்திருந்தனர். நாள்ளிரவு 12 மணியளவில் அந்த கோபுர வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டர். வெளியில் நின்றிருந்தவர்கள் தடதடவென்று உள்ளே சென்று ஆரியபட்டாள் வாசலையொட்டி இருந்த வரிசையில் இடம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சந்தனு மண்டபத்திலும், கிளிமண்டபத்திலும் நள்ளிரவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானம் திறக்கப்பட்டது. ரத்தின அங்கியுடன் வெளியே வந்த பெருமாளைக் கண்டதும் அங்கே குழுமியிருந்த பக்தர்களின் ரெங்கா, ரெங்கா என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது.
அங்கிருந்து மண்டபத்திற்கு பெருமாள் வந்தார். விசேஷ ஆராதனைகள் நடத்தப்பட்டன. பலத்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த முறை தன்வந்திரி சன்னதிக்கு செல்லும் மண்டபப் பகுதி சீரமைக்கப்பட்டு வயதானவர்களும், ஊனமுற்றவர்களும் பாதுகாப்பாக நின்று சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வரும் காட்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4.30 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக வெளியே பெருமாள் வந்தகாட்சியை கண்டவர்கள் கைகூப்பி வணங்கினர். பெருமாள் திருகொட்டகையில் பிரவேசித்தார். சாரதா மரியாதைக்கு பின்னர் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபம் போய் சேர்ந்தார். வெளிப்புறப்பகுதியில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பக்தர்கள் பெருமாளை வணங்கிச் சென்றனர்.
சொர்க்க வாசலில் நுழைவதற்காக கோவிலுக்குள் துவங்கிய பக்தர்கள் வரிசை கோவில் வாசலையும் தாண்டி வெகு தூரத்திற்கு நீண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசலில் நுழைந்து சென்றனர். பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவரங்கம் நாராயண ஜீயர் சுவாமிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சுற்றுலாத்துறை ஆணையர் சந்திரகுமாரன், குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, மனோகரன், வைகைசெல்வன், டாக்டர் விஜயபாஸ்கர், மேயர் ஜெயா, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் மாணிக்கம், துணை மேயர் ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் சீனிவாசன், லதா, ஞானசேகரன், மனோகரன், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசாறை செயலாளர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் வீரராகவ ராவ், அ.தி.மு.க. நிர்வாகிகள் வெல்லமண்டி நடராஜன், நாகநாதர் பாண்டி, டைமன்ட் திருப்பதி, வக்கீல் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பெஸ்ட் பாபு, nullபதி, நாட்டாண்மை சண்முகம், முத்துலட்சுமி முருகேசன், டாக்டர் தமிழரசி, என்ஜினீயர் ராஜா, வி.என்.ஆர்.செல்வம், பொன்னகர் முரளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் சொர்க்க வாசலில் நுழைந்து வெளியே வந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி: 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு சம்மன்
16 Sep 2025புதுடெல்லி : ‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.