எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஸா, ஜூலை.28 - ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளையில், காஸாவைத் தாக்கும் இஸ்ரேல் டேங்கர்கள் வாபஸ் பெறும் வரை, ஐ.நா.வின் நடவடிக்கைக்கு இணங்க முடியாது என்று ஹமாஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 19 நாட்களாக நடை பெற்றுவரும் மோதலில் 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், சுமார் 40 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேல் கடுமையான பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காஸா பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் வான் வழியாக தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல், பின்னர் தரை வழியாகவும் தொடர்ந்தது. சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. நடுவே ஒருநாள் 5 மணி நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
பாலஸ்தீன பகுதியில் அமைதி நிலவ வேண்டுமென்றால் பாலஸ்தீனர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். இஸ்ரேல் பகுதி மீது எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. தற்காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதே இஸ்ரேலின் ஒரே பதிலாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து 12 மணி நேரம் மட்டும் போரை நிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. கேட்டுக் கொண்டதற்கு இணங்க 12 மணி நேரத்திற்கு போரை நிறுத்தியுள்ளோம். இதை மீறி ஹமாஸ் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஏராளமான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மீது வீசப்படுகின்றன. எனினும் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை பெரும்பாலும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகிறது. தரை வழியாக நாங்கள் முன்னேறியுள்ள பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள சுரங்கங்களை அழித்து வருகிறோம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்குக் கரை பகுதியில் வன்முறை வெடித் துள்ளது. இதில் இஸ்ரேல் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரமல்லா, பெத்லஹேம் ஆகிய பகுதிகளில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அதிகபட்சம் 7 நாட்களாவது போர் நிறுத்ததை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, கத்தார் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் பிரான்சில் நடைபெற்றது. எனவே விரைவில் மேலும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சூழலில், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து 24 மணி நேரத்துக்கு தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தமது ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆனால், காஸா நிலைகளில் இருந்து இஸ்ரேலிய டேங்கர்கள் விலக்கிக்கொள்ளப் படாத நிலையில், மனிதநேய அடிப்படையிலான போர் நிறுத்தத்தில் எந்த பலனும் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.