எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஸா, ஜூலை.28 - ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேவேளையில், காஸாவைத் தாக்கும் இஸ்ரேல் டேங்கர்கள் வாபஸ் பெறும் வரை, ஐ.நா.வின் நடவடிக்கைக்கு இணங்க முடியாது என்று ஹமாஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த 19 நாட்களாக நடை பெற்றுவரும் மோதலில் 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், சுமார் 40 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,000 பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியதை அடுத்து இஸ்ரேல் கடுமையான பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. காஸா பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் வான் வழியாக தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல், பின்னர் தரை வழியாகவும் தொடர்ந்தது. சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை. நடுவே ஒருநாள் 5 மணி நேரம் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
பாலஸ்தீன பகுதியில் அமைதி நிலவ வேண்டுமென்றால் பாலஸ்தீனர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். இஸ்ரேல் பகுதி மீது எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. தற்காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதே இஸ்ரேலின் ஒரே பதிலாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக. இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து 12 மணி நேரம் மட்டும் போரை நிறுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. கேட்டுக் கொண்டதற்கு இணங்க 12 மணி நேரத்திற்கு போரை நிறுத்தியுள்ளோம். இதை மீறி ஹமாஸ் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஏராளமான ராக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மீது வீசப்படுகின்றன. எனினும் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை பெரும்பாலும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகிறது. தரை வழியாக நாங்கள் முன்னேறியுள்ள பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஏற்படுத்தியுள்ள சுரங்கங்களை அழித்து வருகிறோம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்குக் கரை பகுதியில் வன்முறை வெடித் துள்ளது. இதில் இஸ்ரேல் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரமல்லா, பெத்லஹேம் ஆகிய பகுதிகளில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அதிகபட்சம் 7 நாட்களாவது போர் நிறுத்ததை அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, கத்தார் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் பிரான்சில் நடைபெற்றது. எனவே விரைவில் மேலும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்தச் சூழலில், ஐ.நா.வின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதாபிமான அடிப்படையில் மேலும் 24 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேல் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து 24 மணி நேரத்துக்கு தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தமது ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆனால், காஸா நிலைகளில் இருந்து இஸ்ரேலிய டேங்கர்கள் விலக்கிக்கொள்ளப் படாத நிலையில், மனிதநேய அடிப்படையிலான போர் நிறுத்தத்தில் எந்த பலனும் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
- நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
- நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
வடமாநில குடும்பம் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Jan 2026சென்னை: சென்னையில் வடமாநில குடும்பம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்
28 Jan 2026சென்னை, தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்த 2 மாதங்களில் மாநாடு நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அஜித் பவார் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
28 Jan 2026சென்னை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு
28 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினாார்.
-
தமிழ்நாட்டில் பா.ஜ. ஆதரவு சக்திகளுக்கு வாக்கு இல்லை: சபாநாயகர் அப்பாவு பேச்சு
28 Jan 2026நெல்லை, த.வெ.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து நாடகம் ஆடுகிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
28 Jan 2026சென்னை, ஏ.டி.ஜி.பி. ஜெயராம் மீதான சஸ்பென்ட் உத்தரவை தமிழக உள்துறை ரத்து செய்துள்ளது.
-
விமான விபத்தில் டெல்லியை சேர்ந்த இரு விமானிகள் பலி
28 Jan 2026புனே, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள் சுமீத் கபூர் , ஷாம்பவி பதக் ஆகியோரும் உயிரிழந்தனர்.
-
இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் வெளியிட்ட ஐந்து அறிவிப்புகள்
28 Jan 2026சென்னை: கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றினார்.
-
விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி நேரில் பார்த்தவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
கைக்கடிகாரம், ஆபரணங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட அஜித் பவார் உடல்
28 Jan 2026மும்பை, உயிரிழந்த அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அஜித் பவார் உயிரிழப்பு: ஜனாதிபதி முர்மு, பிரதமர் இரங்கல்
28 Jan 2026புதுடெல்லி, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 Jan 2026சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு: விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை: மம்தா பானர்ஜி
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், விமான விபத்து சம்பவம் குறித்து முறையான விசாரணை தேவை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. கூட்டணியில் இணையுமாறு காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார் விஜய் தந்தை
28 Jan 2026சென்னை, தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் தந்தையும் இ
-
சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகை
28 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு அடுத்த மாதம் தமிழகம் வருகிறது.
-
அஜித் பவார் விமான விபத்து சம்பவம் குறித்து விசாரணை துணை முதல்வர் ஷிண்டே அறிவிப்பு
28 Jan 2026மும்பை, அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்
-
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 7.85 லட்சம் நிதியுதவி துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
28 Jan 2026சென்னை, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.7.85 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
அஜித் பவார் உயிரிழப்பு: ராகுல் காந்தி இரங்கல்
28 Jan 2026மும்பை, விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பிரச்சாரத்திற்கு சென்று போது நிகழ்ந்த சோகம்: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி
28 Jan 2026மும்பை: மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் புனேவில் நடந்த பிரச்சார கூட்டத்திற்கு விமானத்தில் சென்ற போது விமானம் விபதுக்குள்ளானதில் உயிரிழந்தார்.
-
அஜீத் பவார் மறைவு எதிரொலி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
28 Jan 2026மும்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அளித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளர்.
-
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்: தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறுத்துகிறது இ.யூ.மு.லீக் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 Jan 2026சென்னை: இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறு
-
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை ஜனாதிபதியின் உரை பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை இந்தியாவின் வளர்ச்சிப் பயணம், எதிர்காலத்திற்கான ஒரு தெளிவான திசையைக் காட்டுவதாகப் பிரதமர் நரேந்திர
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத
-
நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி: இந்தியா, உலகின் 3 - வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி பெருமிதம்
28 Jan 2026புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுத


