முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சுவார்த்தை முடிந்த சிறிது நேரத்தில் பாக்., அத்துமீறல்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஆக.29 - இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று அதிகாலை 4 மணி முதல் 5.55 மணிவரை இத்தாக்குதல் நீடித்துள்ளது.

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அண்மைகாலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இதுவரை, இத்தாக்குதலில் எல்லையோர கிராம மக்கள் இருவர் பலியாகியுள்ளனர். எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இருநாட்டு கமாண்டர்கள் தரப்பிலான கொடி அமர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிந்து சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11.50 மணியளவில் தாக்குதல் நடைபெற்றது. பின்னர் நேற்று அதிகாலை 4 மணி முதல் 5.55 மணிவரை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago