முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இனி எஸ்எம்எஸ்-களை சுவரிலிருந்து கூட அனுப்பலாம் - கூகுள் அதிரடி

எஸ்எம்எஸ்-களை மொபைல் மற்றும் டேப்லெட்களில் மட்டுமல்லாது நமது வீட்டுச் சுவற்றில்கூட டைப் செய்யலாம். இதற்காக கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு யோசனையை தனது முந்தைய ப்ராஜெக்ட்டுடன் இணைத்துள்ளது. கூகுள் ஏற்கெனவே ‘ப்ராஜெக்ட் கிளாஸ்’ என்ற கண்ணாடியை உருவாக்கிவருவது நினைவிருக்கலாம். அந்த ப்ராஜெக்ட் கிளாசுடன் இந்த புதிய முறையையும் அறிமுகப்படுத்தவுள்ளது. SMS-களை சுவற்றிலிருந்தும் ‘டைப்’ செய்யும் முறையானது விர்ச்சுவல் கிபேட் என அழைக்கப்படுகிறது. இதை பயன்படுத்தினால் நீங்கள் மொபைல் போன் மட்டுமல்லாது எங்குவேண்டுமானாலும் டைப் செய்து அதை எஸ்எம்எஸ் மற்றும் சாதாரண தரவுகளாகவும் மாற்றமுடியும். ஆனால் இதற்காக கூகுளின் விசேஷ கண்ணாடி மற்றும் கைகளுக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளதை போல சில விசேஷ முறைகளை பின்பற்றவேண்டும். ஆரம்ப நிலையிலுள்ள இந்த சிறப்பு சாதனங்கள் விரைவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனலாம்.

மிளகு ஓரிஜினலா, கலப்படமா...

நாம் வாங்கும் பொருள் ஓரிஜினலா கலப்படமா என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கும் மிளகில் கலப்படத்தை எப்படி கண்டு பிடிப்பது..  இதற்காக  சோதனைச்சாலைக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை.. அதை நீங்கள் வீட்டிலேயே வைத்து கண்டுபிடித்து விடலாம்.. எப்படி என்று பார்க்கலாமா... சிறிய அளவு கருப்பு மிளகு எடுத்து மேஜை மீது வைத்து கட்டை விரலால் இந்த மிளகை அழுத்தவும். அல்லது நசுக்கவும். மிளகு அவ்வளவு எளிதில் உடையாது. ஆனால் அதில் கலப்பட மிளகு இருந்தால் நீங்கள் அதை நசுக்க முடியும். நசுக்கப்பட்ட மிளகு ஒளி வெளிர் கருப்பட்டிகளாக மாறும். மிளகை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். மிளகு தரமானதாக இருந்தால் தண்ணீரின் அடியில் மூழ்கி விடும். மிளகு போலியானதாக இருந்தால், பப்பாளி விதையாக இருந்தால் அது நீரில் மிதக்க செய்யும். மிளகை கடித்தால் காரத்தன்மையுடன் இருக்கும். பப்பாளி விதையாக இருந்தால் அது வாசனை தன்மையற்று, சுவையற்று சுருங்கி இருக்கும்.

வியாழனை விட 10 மடங்கு மிகப் பெரிய கோள்

சூரிய மண்டலத்தில் நமக்கு தெரிந்து 9 கோள்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி பால்வெளி மண்டலத்துக்குள் சென்றால் எண்ணற்ற கோள்களும், நட்சத்திரங்களும் கோடி கணக்கில் கொட்டி கிடக்கின்றன. இயற்கையின் முடிவற்ற ஆச்சரியங்களில் ஒன்றாக பிரபஞ்சம் எப்போதும் திகழ்ந்து வருகிறது. அதற்கு சாட்சியாக தற்போது வியாழனை விட மிகப் பெரிய கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோள் பூமியிலிருந்து 325 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாம். இது வியாழனை விட 10 மடங்கு பெரியது, இதன் எடை ஏறக்குறைய 10 சூரியன்களுக்கு சமம் என்கின்றனர். இது தொடர்பான விஞ்ஞான தகவல்கள் நேச்சர் இதழிலும் வெளியாகி உள்ளன. “b Cen (AB)b" என பெயரிடப்பட்டுள்ள இந்த கோள் தனிப்பட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறென்ன பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

ரத்தத்தை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு

ரத்தத்தில் உள்ள “ஹீமோகுளோபின்” என்ற வேதிப்பொருள் தான் அதற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு ஆக்ஸிசனை கொடுப்பதும் அதுதான். ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம். சிவப்பணுக்கள் காணப்படும். அவை உற்பத்தியாகும் இடம் இதயமல்ல; எலும்பு மஜ்ஜையில்தான் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்.  வெள்ளை அணுக்களே நோய் எதிர்ப்புச்சக்தியின் முக்கிய ஆதாரம். ரத்த கசிவை தடுப்பவை பிளேட்லட் அணுக்கள். ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மிலி ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் மற்ற அணுக்கள் 10 சதவீதமும் இருக்கும். உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா... ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்!  ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்!  பைக்கின் சராசரி வேகத்தை விட சற்று அதிகம்.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

புது முயற்சி

பாகிஸ்தானில், லாகூரை சேர்ந்த அகமது அலி என்ற சிறுவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்துள்ளான். பள்ளியில் படிக்கும் அவன் அதை வீடியோ எடுத்து சமூகவலை தளங் களில் வெளியிட்டான். மேலும், கின்னஸ் உலக சாதனைக்காக அந்த வீடியோவை தற்போது அனுப்பி வைத்து இருக்கிறான்.

பறக்கும் டாக்சியை பரிசோதித்த தென் கொரியா

கார்கள் தரையில் சீறிப் பாய்ந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மாறாக அவை விரைவில் வானில் பறக்க தயாராகி வருகின்றன. இதற்கான பல்வேறு முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வந்த போதிலும் இதில் தென் கொரியாதான் முன் கை எடுத்துள்ளது. வெகு விரைவில் தனது நாட்டில் பறக்கும் டாக்ஸிகலை பயன்படுத்தப் போவதாக கடந்த 2020 இல் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது பறக்கும் கார் டாக்ஸியை வெற்றிகரமாக அந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு Gyeonggi Province இல் உள்ள ஜிம்போ நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ஜெர்மனி நிறுவனமான Volocopter இதற்கான பறக்கும் டாக்ஸியை வடிவமைத்து தந்துள்ளது. ஜிம்போவிலிருந்து தலைநகர் சியோல் வரை சுமார் 30 முதல் 50 கிமீ வரை இந்த பறக்கும் டாக்ஸி சேவையை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2025க்குள் உறுதியாக இது தொடங்கப்பட்டு விடும் என்கிறது தென்கொரியா. அப்படியானால் விரைவில் நமது நாட்டிலும் நாமும் பறக்கும் டாக்ஸியில் விரைவில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 7 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago