முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

யூதர்களின் அடையாளம்

இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் யூத மத அடையாளமான ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டு 8.5 லட்சம் டாலர்களுக்கு அமெரிக்காவில் ஏலம் போனது. இக்கல்வெட்டை ஏலம் எடுத்தவர் அருங்காட்சியகம் வைக்கவுள்ளார்.

கோழிகள் காது மடல்களின் நிறத்திலேயே முட்டை இடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோழிகளுக்கு வெளிப்புறமாக தெரியும் வகையில் காதுகள் இல்லாவிட்டாலும், அவைகளுக்கும் காது மடல்கள் உள்ள. கோழிகளின் இனங்களை பொறுத்து காது மடல்களின்  வண்ணங்களும் அதற்கேற்ப மாறுபட்டு காணப்படும். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது வழக்கமானதுதான். ஆனால் கோழிகள் தங்களின் காது மடல்களின் வண்ணத்திலேயே முட்டையிடும் என்பதுதான் ஆச்சரியம். வெள்ளை மடலை கொண்ட கோழி வெள்ளை முட்டையையும், அடர் வண்ணத்தை கொண்ட கோழி அடர் வண்ணத்திலும் முட்டையிடும் என்றால் அது ஆச்சரியம் தானே... இனி முட்டையை பார்க்கும் போது கூடவே உங்களுக்கு கோழிகளின் காது மடலும் நினவைுக்கு வரக் கூடும். ஆனால் ஒரே மாதிரி வெள்ளை வெளேரென முட்டையிடும் பிராய்லர் கோழிகளுக்கு இந்த விதி  பொருந்தாது என்பதை மறந்து விட வேண்டாம்.

வியப்பில் ஆழ்த்தும் வித்தியாசமான பாலம்

வியட்நாமில் டா நாங்கிற்கு வெளியே கல்லினால் வடிமைக்கப்பட்ட இரு கைகள் பாலத்தை தாங்குவது போல இருக்கும் ஒரு பிரமாண்டமான காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. கோல்டன் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் பாலம் பனாமா மலைகளுக்கு மேலே கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் அதாவது சுமார் 3280 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேலிருந்து பார்த்தால் அந்த இடத்தை சுற்றியுள்ள பரந்த ஆழகான காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தங்க நிற வண்ணம் கொண்ட இந்த பாலம் ஊதா நிற லோபிலியா கிரிஸான்தமம்களால் (purple Lobelia Chrysanthemums ) வரிசையாக அமைந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 150 மீட்டர் நீளமுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தை தாங்கி கொண்டிருக்கும் செதுக்கப்பட்ட கைகள் தான் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அழகிய காட்சியை தருகிறது.

13 ஆயிரம் கிமீ நிற்காமல் பறக்கும் பறவை

மனிதர்களுக்கு அதிலும் பயிற்சி பெற்றவர்களுக்கே சும்மா ஒரு 2 கிமீ ஓடினாலே நாக்கு வறண்டு விடும். தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். 13 ஆயிரம் கிமீ அதிலும் 10 நாட்கள் நிற்காமல் அன்னம் தண்ணி புழங்காமல் ஒரு சிறிய பறவை பறக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. Bar-tailed Godwit என்ற நாரை வகையைச் சேர்ந்த பறவைதான் இந்த சாகசக்காரி. அமெரிக்காவின் அலாஸ்காவில் வசிக்கும் இது இனப்பெருக்கத்துக்காக பசிபிக் பெருங்கடலை கடக்கிறது. 13 ஆயிரம் கிமீ கடந்து நியூஸிலாந்து செல்கிறது. இடையில் எங்கும் நிற்காமல்.. எங்கு நிற்க.. அதுதான் கடலாச்சே.. இரை தண்ணீர் கூட எடுக்காமல் 10 நாள் பயணம்.  இதை நம்பாத விஞ்ஞானிகள் இருக்கிறார்களே... அதற்காகவே இதன் காலில் ஜிபிஎஸ், சென்சர் என்ற கண்ட கருமாந்திரங்களையும் வைத்து ஆராய்ந்ததில் அது உண்மை தான் என்பது உறுதியானது. ஆனால் எப்படி? 10 நாள் எதுவும் சாப்பிடாமல்... விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் Bar-tailed Godwit அது தன்பாட்டுக்கு கடல் மீது பறந்து கொண்டிருக்கிறது.

சூடான பாலை குடித்தால் இரவில் நன்றாக தூக்கம் வருவது ஏன்?

இரவில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலை குடித்தால் நன்றாக தூக்கம் வருவது ஏன் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நம் நாடுகளில் நீண்ட காலமாகவே இரவு உறக்கத்துக்கு முன்பு சூடாக ஒரு டம்பளர் பால் குடிப்பது வழக்கம். தற்போது மேலை நாடுகளிலும் இரவில் நன்றாக உறங்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். பாலில் தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகளை பொதுவாக டிரிப்டோபன் என குறிப்பிடுகின்றனர். அண்மையில் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்  கேசீன் ட்ரிப்டிக் ஹைட்ரோலைசேட் (சிடிஎச்) எனப்படும் பெப்டைட்டுகளின் கலவையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கு அளிக்கப்படும் பென்சோடியாசெபைன்கள், சோல்பிடெம் போன்றவை கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துபவன. ஆனால் பசுவின் பாலில் கிடைக்கும் கேசீன் எனப்படும் புரதம் செரிமானத்தை மேம்படுத்தி சிடிஎச் எனப்படும் தூக்கத்தை மேம்படுத்தும் பெப்டைட்களின் கலவையை கொண்டிருப்பதால் இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக் கூடியது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நெல்சன் மண்டேலா

குத்துச்சண்டை வீரராக அறியப் பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர். இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாம். மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago