முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிறுநீர் பாதை எரிச்சல் நீங்க இயற்கை மருத்துவம்

  1. சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு  காரணம் கிருமிகள் ஆகும்.
  2. கோடைகாலங்களில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் போது நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலமும்  சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
  3. நீர் கடுப்பு எனும் நீர்சுருக்கு உள்ளவர்களுக்கு சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். 
  4. இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
  5. சிறுநீர் பாதையில் வளர்ச்சியடையும் பாக்டீரியாக்களின் விளைவாக அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுத்துவதன் காரணமாக, வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.
  6. இரவு ஒரு இளநீரில் 10 கிராம் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து காலை அந்த நீரை பருகி வந்தால் உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  7. உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும்.
  8. சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.
  9. சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர்க்குழாய் ஆகியவற்றில் அடைப்பு ஏற்பட்டால், சிறுநீர் மீண்டும் சிறுநீரகங்களுக்குள் பாய்கிறது, இதனால் சிறுநீர்ப்பை அடைப்பு ஏற்படுகிறது. காரணங்கள் வேறுபட்டாலும், அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்