முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 நாட்களுக்கு பிறகு அட்டாரி-வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      உலகம்
INDIA PAK 2025-05-03

புதுடில்லி, போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் மீண்டும் துவங்குகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான அட்டாரி, வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாள்தோறும் மாலையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந் நிலையில், நேற்று முதல் தினமும், அட்டாரி,வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு நடைபெறும். 12 நாட்கள் கழித்து, பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அட்டாரி, வாகா எல்லையிலும், பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையிலும் நேற்று முதல் மீண்டும் தொடங்கும். இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் வாயில்கள் மூடப்பட்டு இருக்கும். நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் கைகுலுக்க மாட்டார்கள்.

 

1959-ம் ஆண்டு முதல் எல்லையில் நடத்தப்பட்டு வந்த கொடியிறக்க நிகழ்வு, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் மே 8ல் இருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது 12 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து