எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.- 25 - இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்து ஒழித்த இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசை மட்டும் ஈழத்தமிழர்கள் வெறுக்கவில்லை. தங்களை காப்பாற்றுவார்கள் என்று ஏங்கித்தவித்த தமிழினத்துக்கே துரோகம் செய்த கருணாநிதியைத்தான் அதிகமாக வெறுக்கிறார்கள். இனி மேல் பிறர்மீது பழி சுமத்தி தப்பித்துக்கொள்ளும் குள்ளநரி தந்திரம் கருணாநிதிக்கு எடுபடாது என்று விஜயகாந்த் காட்டமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கபட நாடகம் யார் ஆடினாலும் கண்டிக்கத்தக்கது. அதுவும் பாமர மக்களை திசை திருப்பும் வகையில் அரசியல் தலைவர்கள் கபட நாடகம் ஆடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. சான்றாக விடுதலைப் புலி இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக் கட்டத்தில் தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரம் தமிழர்கள் ஒரே நாளில் இலங்கை அரசின் முப்படைகளும் வீசிய கொத்து குண்டுகளுக்கு இரையாயினர். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கண்டன ஊர்வலம் நடத்தி இரத்தக் கண்ணீர் வடித்தனர்.
தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழின வாழ்வை விட முதலமைச்சர் பதவி பெரிது என்று கருதிய அவர், காலை உணவுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்து, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாக தெரிவித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை, இனப் படுகொலையும் தவிர்க்கப்படவில்லை. அந்த சிதம்பரம் கருணாநிதியிடம் சொன்ன சிதம்பர இரகசியம் என்ன என்பதை கருணாநிதி வெளியிடுவாரா?
போர் தொடர்ந்தபொழுது கருணாநிதி, மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று மழுப்பினாரே, அது கபட நாடகம் இல்லையா?
அப்பாவித் தமிழ்ப் பெண்களை கற்பழித்தது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் தமிழ் இளைஞர்களை படுகொலை செய்தது, தமிழ் மக்களை கடத்திக் கொன்று காணாமல் செய்தது, ஆயுதம் இல்லாத அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுமாரி பொழிந்தது, உணவு வழங்காமல் தமிழர்களை பட்டினி போட்டு சாகடித்தது, மருந்துகளும், சிகிச்சையும் இல்லாமல் காயமுற்ற மற்றும் நோயுற்ற தமிழர்களை அப்படியே சாகவிட்டது, இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நிருபர்களை அனுமதிக்காமல் அவர்களை பயமுறுத்தி வெளியேற்றியது போன்ற மனித உரிமை மீறல் மற்றும் இனப் படுகொலைக்கான குற்றங்கள் சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்டன என்று ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க இலங்கை அரசு எவ்வளவோ முயன்றும், வரும் 25.4.2011 அன்று(இன்று) ஐ.நா. மன்றம் இந்த குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட உள்ளது. இந்தப் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. எனினும் அவர், ஏற்கனவே 1991இல் இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆட்சியை இழந்ததாகவும், இப்பொழுது மூன்றாவது முறையும் நான் ஆட்சியை இழந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று எண்ணியிருக்கின்றேனோ அவற்றை எல்லாம் செய்து முடிக்காமலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கும் என்று புலம்பியுள்ளார்.
ஆட்சி போனால் திரும்பப் பெறலாம். ஆனால் போன உயிர்களைத் திரும்பப் பெற முடியுமா?
ஐ.நா. மன்றம் இந்த உண்மையை உணர்ந்து சிங்கள இனவெறி அரசின் அதிபர் மகிந்தே ராஜபக்சேயை போர்க் குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறது. ஆனால் முதலமைச்சர் கருணாநிதியோ தனது அணியில் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி மகிந்தே ராஜபக்சேயுடன் கை குலுக்க வைக்கிறார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் உயிர் வாழ கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இந்த சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. திடீரென்று ஒரு நாள் கருணாநிதி தனது மகள் கனிமொழியின் மூலம் இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி காலையில் கைது செய்து மாலையில் விடுவித்தார். இடைவேளை உண்ணாவிரதம் போல இதுவும் ஒரு கபட நாடகம் அல்லவா? இன்றும் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் அழுகிய பிணங்கள் கடற்கரையில் ஒதுங்குகின்ற நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிதான் கருணாநிதி ஆட்சியில்.
தனது பிள்ளை மத்திய மந்திரி அழகிரி என்றால் எங்கே கைது செய்து விடுவார்களோ என்று முன் கூட்டியே அவர் பெயிலில் உள்ளார். இன்னொரு மத்திய மந்திரி ராஜா கேட்பாரின்றி திகார் ஜெயிலில் உள்ளார். கேட்டால் ஒவ்வொரு nullநீதிமன்றத்தில் ஒவ்வொரு வகையான தீர்ப்பு இல்லையா என்பார். கிடைக்கின்ற விவரங்களின் அடிப்படையில் வழங்கப்படுவது தீர்ப்பு. விவரங்கள் தவறாகவோ அல்லது கூடுதலாகவோ கிடைக்கிறபொழுது தீர்ப்பு மாற்றத்திற்கு ஆளாகிறது. உண்மை கிடைக்கின்ற வரை மேல் முறையீடு செய்ய வேண்டிய கருணாநிதி அரசு, முன்னாள் தி.மு.க. எம்.பி., தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் எங்கே உண்மை வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தால்தான் மேல் முறையீடு செய்யவில்லையா?
தேடப்படும் கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. கருணாநிதி அவர் மூலம்தான் இலங்கையில் நாடாளுமன்ற குழுவின் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். 1956ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாக தம்பட்டம் அடிக்கும் கருணாநிதி இலங்கைத் தமிழர் தொண்டுக்கு நற்சான்று அளிக்க வேண்டியவர்கள் யார்? இங்குள்ள தமிழர்கள் அல்ல, இலங்கையில் குறிப்பாக இனப் படுகொலைக்கு ஆளான ஈழப் பகுதியில் இருக்கும் தமிழர்கள்தான்.
போரின் உச்சக்கட்டத்தில் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள்? தமிழ்நாடும், அதன் முதலமைச்சர் கருணாநிதியும் தங்களை காப்பாற்றுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் காப்பாற்றாதது மட்டுமல்ல, தமிழினப் படுகொலைக்கும் கருணாநிதி துணை போனார் என்ற துரோக வரலாறுதான் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த பாடமாகும். அவர்கள் இன்று வெறுப்பது இலங்கை அரசுக்கு துணை போன இந்திய அரசை மட்டுமல்ல, தமிழனாகப் பிறந்து தமிழ் இனத்துக்கே துரோகம் செய்த தமிழ் இனத் துரோகி கருணாநிதியைத்தான்.
பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் குள்ளநரி தந்திரம் இனி எடுபடாது. தமிழ் இன வரலாற்றில் துடைத்தெறிய முடியாத தமிழினப் படுகொலை என்ற களங்கத்திற்கு கருணாநிதி முழு முதற்காரணம் என்பதை வரலாறு தூற்றும், வருங்கால தமிழினம் தூற்றும். உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் தூற்றுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை : போக்குவரத்து மாற்றம்
07 Oct 2025கோவை : கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் நேரில் சந்தித்து ராமதாசை நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
விஜய் மீது எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன்
07 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
எனக்கு ஓய்வே கிடையாது: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேட்டி
07 Oct 2025சென்னை, எனக்கு ஓய்வே கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் ஈரான் கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்கள் நீக்கம்
07 Oct 2025தெஹ்ரான், கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை ஈரான் அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
-
இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்
07 Oct 2025நியூயார்க், கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்
-
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
-
இமயமலையில் இருந்து ராமதாஸை நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து இமயமலையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார்.
-
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
07 Oct 2025புதுடெல்லி, சோனம் வாங்சுக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஏ.ஐ. தொழில்நுட்பம் சமநிலை தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
07 Oct 2025புதுடெல்லி, நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: 791 புள்ளிகளுடன் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா முதலிடம்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
-
முன் இந்திய வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் கவுதம் காம்பீர்
07 Oct 2025புதுடெல்லி : இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு இன்று
-
மன்னிப்பு கேட்கப் போவதில்லை: தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
07 Oct 2025புதுடெல்லி : தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2025சென்னை : புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக உள்ள தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது என்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சி தொடங
-
கரூர் சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு: சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
07 Oct 2025சென்னை : சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. நிர்வாகி உமா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
நோயாளிகள் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர் - அரசாணை வெளியீடு
07 Oct 2025சென்னை : தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்கள் என்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
-
ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
குல்தீப் யாதவ்...
-
சபரிமலை கவச முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது கேரள ஐகோர்ட்
07 Oct 2025திருவனந்தபுரம், சபரிமலை கவச முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை
07 Oct 2025பாட்னா, பீகார் மாநில சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
-
பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் எங்கே? - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
07 Oct 2025புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
07 Oct 2025சிவகங்கை : அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது
07 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று (07-10-2025) மேலும் அதிகரித்து விற்பனையானது.
-
2025-இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு : 3 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பு
07 Oct 2025ஸ்டாக்ஹோம் : 2025-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2025புதுடெல்லி, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.