எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெருசலேம், பிப்.- 18 - இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்கள் குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று லெபனான் தீவிரவாத குழு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சென்ற கார் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் அதிகாரி படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை என்று லெபனான் தீவிரவாத கும்பல் மறுத்துள்ளது. லெபனான் தீவிரவாத கும்பலான ஹெஸ்புல்லாவின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா இது குறித்து கூறுகையில், இந்தியாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். தங்களது குழுவின் தலைமை தளபதியாக விளங்கிய இமாத் முக்மியா படுகொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆனதன் நினைவு தின பேரணியில் உரை நிகழ்த்திய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பெய்ரூட்டில் நடந்த இந்த பேரணி பற்றி செய்திகளை லெபனான் டி.வி. ஒன்று ஒளிபரப்பியது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தலைமை தளபதி கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்காமல் விட மாட்டோம் என்று அவர் இஸ்ரேலை எச்சரித்தார். இஸ்ரேல் ராணுவத்தினரோ அல்லது இஸ்ரேல் தூதரக அதிகாரிகளோ தங்களது இலக்கு அல்ல என்றும் ஒரு குறிப்பிட்ட இஸ்ரேலிய தலைவர்கள்தான் தங்களது இலக்கு என்றும் நஸ்ரல்லா கூறினார்.
நாங்கள் யாரை பழி வாங்கப்போகிறோம் என்பது அவர்களுக்கே தெரியும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தீவிரவாதிகளோ அல்லது லெபனான் தீவிரவாதிகளோதான் காரணமாக இருக்கலாம் என்று இஸ்ரேல் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


