எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர்,ஜூலை,11 - கர்நாடக மாநில பாரதிய ஜனதாவில் சிக்கல் தீர்ந்தது. இதனைத்தொடர்ந்து அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாளை பதவி ஏற்றுக்கொள்கிறார். ஷெட்டர் அமைச்சரவையில் 2 துணைமுதல்வர்கள் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருக்கிறது. முதல்வராக இருந்த எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதோடு அவர் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டதால் அவரை முதல்வர் பதவியில் இருந்து கட்சி மேலிடம் நீக்கிவிட்டது. அதேசமயத்தில் எடியூரப்பா ஆதரித்த சதானந்த கவுடா முதல்வராக்கப்பட்டார். சதானந்தா கவுடா முதல்வராக பதவி ஏற்ற சுமார்ஹ 6 மாத காலத்திற்குள் அவருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்காவிட்டால் ராஜினாமா செய்துவிடுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 70 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்திற்கு மிரட்டல் விடுத்ததோடு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் விதித்தனர். இதனையொட்டி சதானந்த கவுடாவை டெல்லிக்கு வரும்படி கட்சி தலைவர் நிதீன் கட்காரி அழைத்தார். இதனையொட்டி டெல்லி சென்ற சதானந்த கவுடா,கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்தும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதையும் விளக்கினார். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர்களின் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதால் கட்சி மேலிடத்திற்கு வேறு வழியில்லாமல் சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டர். அதற்கு பதிலாக மாநில பா.ஜ.க. தலைவர் பதவியை சதானந்தாவுக்கு கொடுப்பதாக கட்சி மேலிடம் உறுதி அளித்தது.
மேலும் சதானந்த கவுடாவுக்கு பதிலாக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. முறைப்படி ஷெட்டரை முதல்வராக தேர்ந்தெடுக்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்றுக்காலையில் பெங்களூரில் நடக்கவிருந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர் அருண்ஜெட்லி உள்பட பல தலைவர்கள் வந்திருந்தனர். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் சதானந்த கவுடா திடீரென்று போர்க்கொடி உயர்த்தினர். கட்சி மேலிடம் அளித்த உறுதிமொழிப்படி தமக்கு மாநில தலைவர் பதவி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணிப்போம் என்றும் சதானந்தா கவுடா அறிவித்தார். இதனால் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் இருந்தது. இதனையொட்டி நேற்றுக்காலையில் கூடவிருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் சதானந்த கவுடாவுடன் கட்சி மூத்த தலைவர்கள் சந்தித்து பேசி அவரை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜெகதீஷ் ஷெட்டர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதல்வராக நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிகிறது. துணைமுதல்வர்களாக 2 பேர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் மாநில பா.ஜ.க. தலைவராக இருக்கும் ஈஸ்வரப்பாவும் ஒருவராக இருக்கலாம் என்று உறுதியாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026


