எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர், நவ.- - 19 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரலாறு காணாத கூட்டம் இருந்தது. முருகப்பெருமானின் 2 வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவுள் சுப்பிரமணிய சுவாமியாக அருள் பாலிக்கின்றார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 13 ந் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் காலை மற்றும் மாலை யாக சாலை பூஜைகள் நடந்தன. தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து சுவாமிக்கும், அம்-பாள்க-ளுக்கும் மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. கந்தசஷ்டி விழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்-சி-கால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விசால மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபி-ஷே-கம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர் மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய மாலை 4.25 மணிக்கு கடற்கரை நோக்கி புறப்பட்டார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகன் தனது பரிவாரங்களுடன், முருக பெருமானை நோக்கி போர்புரிய சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே வந்து நின்றான். ஆர்ப்பரித்து வந்த யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். அதன் பிறகு கன்மம் உருவம் கொண்ட சிங்கமுகாசூரன் அதேபோல் முருகனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயாரானான். அவனையும் முருக பெருமான் தன் வேலால் வதம் செய்தார். சகோதரர்களை தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மன் தனது படை வீரர்களுடன் வேகமாக முருக பெருமானுடன் போர் புரிய வந்தான். முருகக் கடவுள் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் சுற்றி வட்டமிட்டது. கடற்கரையில் கூடி இருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபம் சென்றடைந்தார். சினம் தணிந்த முருகனுக்கு, வள்ளி, தெய்வானை- அம்பாள்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு இருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு சாயாபிஷேகம் நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் கட்டிச் சென்றனர். சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பல மணி நேரம் வரிசையில் காத்துநின்று சாமி கும்பிட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்-தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காண கோவிலுக்கு வந்து இருந்தனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்-தன. மேலும் சூரசம்ஹார விழாவை கூட்ட நெரிசல் இல்லாமல் பார்க்க பெரிய டிஜிட்டல் திரை கோவில் வளாகத்தில் 2 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. இதேபோன்று திருச்-செந்தூருக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டு இருந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ்ஈடுபட்டு இருந்தனர். இன்று (திங்கள்) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதி-யம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அதி-காலை 5 மணி அளவில் அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார். மாலை 4.35 மணிக்கு மேல் சுவாமி மாலை மாற்று விழாவுக்கு புறப்படுகிறார். தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி வைதீக முறைப்படி நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்) மாலை குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றனர். 21, 22, 23 ஆகிய தேதிகளில் தினமும் மாலை திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடைபெறும். 24ந் தேதி (சனிக்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு, சுவா-மியும், அம்பாளும் வீதி உலா வந்து பின்னர் கோவிலை சேர்கின்றனர். விழா நாட்களில் இன்னிசை நிகழ்ச்சி, பாராயணம் போன்றவை கோவில் கலையரங்கில் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
முருங்கை சாறு, பாதாம் அல்வா: இந்திய ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புதினுக்கு சிறப்பு விருந்து
06 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்து மெனு கார்டு வைரலாகியுள்ளது. அதில், தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு’ முதலிடம் பிடித்துள்ளது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்: 19-ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டால
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடியவர்: அம்பேத்கருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
06 Dec 2025சென்னை, அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
06 Dec 2025சென்னை, அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
1,609.69 கோடி ரூபாய் மதிப்பிலான பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
06 Dec 2025சென்னை, மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்க ரூ.1,609.69 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை இன்று உத்தங்குடியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க
-
இண்டிகோ நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: விமான போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் மோகன் நாயுடு குறினார்.


