எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.7 - தமிழக சட்டப்பேரவை ஜனநாயக பண்புகளுக்கும், அரசியல் சட்ட கடமை உணர்வுகளுக்கும் மையமாக திகழ்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் வைர விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ சட்டப்பேரவை 2012 நவம்பர் 30-ந் தேதி வைர விழா கொண்டாடுவது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜனநாயக பண்புகளுக்கும், அரசியல் சட்ட கடமையுணர்வுக்கும் சட்டப்பேரவை மையமாக திகழ்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை மாபெரும் அரசியல் தலைவர்களின் இருப்பிடமாக இருந்து வருகிறது. ராஜகோபாலாச்சாரி, கே.காமராஜ், எம்.பக்தவக்சலம், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோருக்கும் மற்றும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மாதிரி மாநிலமாக்கிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான வேளையில் தமிழக சட்டப்பேரவையை மரியாதைக்கும, பெருமைக்கும் உரியதாக ஆக்கிய அனைவருக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய உறுப்பினர்களுக்கும், முன்னாள் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக மக்கள் அமைதியும், வளமும், நல்லிணக்கமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


