எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, டிச. 20 - சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு மத்தியில் நடக்கிறது. இன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும். அப்போது இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா? அல்லது காங்கிரசா என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி முதலில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. பிறகு குஜராத் மாநிலத்தில் கடந்த 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக கடந்த 13 ம் தேதியன்று 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது 70.75 சதவீத வாக்குகள் பதிவாயின. பிறகு 2 ம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் கடந்த 17 ம் தேதியன்று 95 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த இறுதிக் கட்ட தேர்தலிலும் குஜராத் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், முதியோர்களும் வாக்களித்தனர். இந்த தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்ட மணி நகர் தொகுதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தார்கள். அதைப் போல் ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர மற்றபடி இம்மாநிலத்தில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.
முன்னதாக இந்த இரண்டு கட்ட தேர்தலிலுமே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார்கள். மாநில முதல்வர் மோடி பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் தனது 10 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார். பா.ஜ.க. தலைவர்களும் அவருக்காக பிரச்சாரம் செய்தனர்.
இதே போல் காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இங்கு பிரச்சாரம் செய்த பிரதமர் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இப்படியாக விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்து கடந்த 17 ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா சார்பில் முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஆனந்தி பட்டேல், சவுரவ் பட்டேல், பிரபுல் பட்டேல், ஜெயநாராயணன் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா, அவரது மகன் மகேந்திர வகேலா உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.
முதல்வர் மோடியை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ்பட் மனைவி சுவேதாபட் களமிறங்கினார். முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் புதிய கட்சி தொடங்கியிருந்தார். இவரது கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்தது. இதனால் பாரதீய ஜனதாவின் ஓட்டுக்கள் பிரியும் என்று காங்கிரஸ் கட்சி கணக்குப் போட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் முதல்வர் மோடியே வெற்றி பெறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதே கருத்தை முதல்வர் மோடியும் கூறியுள்ளார்.
தேர்தலில் வாக்களித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மூன்றாவது முறையாக நான் ஆட்சியைப் பிடிப்பேன். எனது நல்லாட்சிக்கும், நான் ஏற்படுத்திய முன்னேற்றத்திற்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையோடு கூறினார். ஒரு வேளை இவர் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றால் அது இவருக்கு ஹாட்ரிக் சாதனையாகத்தான் இருக்கும். எது எப்படியோ இன்று மதியத்திற்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். அப்போது குஜராத்திலும் சரி, இமாச்சல் பிரதேசத்திலும் சரி, ஆட்சியைப் பிடிப்பது காங்கிரசா?அல்லது பா.ஜ.க.வா என்பது தெரிந்து விடும். வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெறும். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதால் முடிவுகள் 4 மணி நேரத்திற்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


