எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.27 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்க மாட்டோம் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மீறி ஆரம்பிக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாநகரில் உள்ள வால்மார்ட் அலுவலகத்தை இடதுசாரி அமைப்புகளின் ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்த விபரம் வருமாறு:-
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை, பன்னாட்டு நிறுவனங்களை மத்திய அரச அனுமதித்துள்ளது. இது இந்திய வர்த்தகச் சந்தையை கைப்பற்றவும், வேலைவாய்ப்பைப் பறிக்கவும், வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கவுமே வழிவகுக்கும். எனவே, இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம், அண்ணாநகரில் தனது வணிக அலுவலகத்தை திறந்துள்ளது. திருவேற்காடு பள்ளிக் குப்பத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் சேமிப்பு குளிர்பதன கிடங்கையும் அந்த நிறுவனம் அமைத்து வருகிறது. சில்லரை வியாபாரிகளை அணுகி அனைத்து பொருட்களையும் குறைந்த விலை, கடன் வசதி, விரும்பிய இடத்தில் விநியோகம் உள்ளிட்ட பலவற்றைச் சொல்லி உறுப்பினர்களாக சேர்த்து வருகிறது. ஜனவரி முதல் வியாபாரத்தை தொடங்கவும் உள்ளது. சில்லரை வணிகத்தில் வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவையும் மீறி இத்தகைய அத்துமீறல் நடந்து வருகிறது.
இதனை கண்டித்தும், வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் நேற்று (டிச.26) இந்த போராட்டம் நடைபெற்றது. அண்ணாநகர் மேற்கு போக்குவரத்து பணிமனை அருகே இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். பன்னாட்டு நிறுவங்கள் இந்தியாவிற்குள் வந்ததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கும் வகையில் கட்சி ஊழியர்கள் வேடமிட்டு வந்தனர்.
பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் கருத்துப்படங்களை கொண்டு வந்திருந்தனர். வால்மார்ட் அலுவலகத்தை நோக்கி பெண்கள், மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளர்கள், கட்சி ஊழியர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் தா.பாண்டின் தலைமையில் ஊர்வலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடி, போலீசாரின் 6 பாதுகாப்பு வளையங்களையும் உடைத்துக் கொண்டு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி, வால்மார்ட் அலுவலகம் அமைந்துள்ள ஏ.வி.கே.டவரை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது இளைஞர்கள் அமெரிக்க கொடியை எரித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
சில்லரை வணிகம் செய்யவில்லை; சில்லரை வணிகர்களுக்கு மொத்தமாக பொருட்களை வழங்குகிறோம் என்று வால்மார்ட் நிறுவனம் புது விளக்கம் தருகிறது. சில்லரை வர்த்தகத்தில் தந்திரமாக நுழைகிறது. திருவேற்காட்டிலிருந்தும், அண்ணாநகரிலிருந்தும் வால்மார்ட் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதனை வலியுறுத்தி இந்த மகத்தான முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. வால்மார்ட் நிறுவனத்தை முழுமையாக அகற்றும் வரை போராட்டம் ஓயாது. இந்தியாவில் எங்கு வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கடைகள் திறந்தாலும் அதனை எதிர்த்து இடதுசாரிகள் போராடுவார்கள் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.சீனிவாசன், என்.குணசேகரன், கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, எஸ்.கண்ணன், ப.சுந்தரராசன் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), கே.செல்வராஜ் (திருவள்ளுர்), மோகனன் (காஞ்சிபுரம்) சிபிஐ தேசியக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.தியாகராஜன், மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் மு.சம்பத் (வடசென்னை), எஸ்.ஏழுமலை (தென்சென்னை), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.கனகராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.ராணி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 14 hours ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்12 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
18 May 2024சென்னை : மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு பவுன் தங்கம் விலை.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்