எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.1 - பாராளுமன்ற லோக்சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. சிகரெட்களுக்கு 18 சதவீத உற்பத்தி வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செட்டாப் பாக்ஸ்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆடம்பர வாகன இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. செல்போன்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலையும் உயரும். இதனால் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையுள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
பாராளுமன்றத்தில் நேற்று 2013-2014-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இதுவரை ப.சிதம்பரம் 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்தான் 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால் காங்கிரஸ் அரசின் கடைசி பட்ஜெட் இது. எனவே வரிசலுகைகள் இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். வருமான வரிவிலக்கு உச்சவரம்பிலும் மாற்றம் இருக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. மாறாக புதிய வரிகள்தான் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது ஒரு ஏமாற்றம் தரும் பட்ஜெட் என்றே சொல்லலாம். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள விபரங்களை இங்கு பார்ப்போம்.
நேரடி மானிய திட்டம் மூலம் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளி ஆலைகளில் சுற்றச்சூழல் பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 3.4-3.8 சதவீதமாக இருக்கும். தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் மாத சம்பளம் வாங்குபவர்களும் நடுத்தர மக்களும் ஏமாந்து போனார்கள். ரூ.கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான கூடுதல் வரிவிதிப்பும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை 15 சதவீதமாக இருக்கும். வரிக்கொள்கையை மறு ஆய்வு செய்ய புதிய ஆணையம் அமைக்கப்படும். குழந்தைகளுக்கான தேசிய நலநிதி உருவாக்கப்படும். ரூ.50 லட்சத்திற்கு மேல் அசையா சொத்து விற்பனையில் ஒரு சதவீத வரிப்பிடித்தம் செய்யப்படும். விவசாய நிலங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். பங்கு பரிவர்த்தனை வரி குறைக்கப்படும். வரிஏய்ப்பு தடுப்பு சட்டம் 2014 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும். விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் செட்டாப் பாக்ஸ்களுக்கு வரி உயர்வு. இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்ளுக்கு (கார்கள்) சுங்க வரி 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
சிகரெட்டுக்கு வரி
சிகரெட்டுகளுக்கு 18 சதவீத வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்களுக்கும் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களுக்கு 6 சதவீத வரி வதிக்கப்படும். ரூ.2000 ஆயிரத்திற்கு கீழே விலை இருந்தால் மாற்றம் இல்லை. திரைப்பட துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கப்பல் கட்டும் தொழிலுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்யுவி வகை கார்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது மறைமுக வரிமூலம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும். நேரடி வரி மூலம் ரூ.13,300 கோடி வரி கிடைக்கும். வெள்ளி உற்பத்திக்கு 4 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. சேவை வரி ஏய்ப்பாளர்களுக்கு ஒரு முறை மன்னிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கென்று தனியாக அனைத்து மகளிர் வங்கி துவங்கப்பட உள்ளது. இந்த வங்கிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் துவக்கப்படும். இதற்காக ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன ஓட்டல்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் மதிய உணவு திட்டத்திற்கு 13 ஆயிரத்து 215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை போல் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறைக்கு அதாவது ராணுவத்துக்கு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 672 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 294 நகரங்களில் எப்எம்.வசதி செய்யப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் எல்.ஐ.சி. அலுவலகம் அமைக்கப்படும். தூத்துக்குடி துறைமுக விரிவாகத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு ரூ.65 ஆயிரத்து 867 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காற்றாலை திட்டத்தை ஊக்குவிக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சித்தாவுக்கு ரூ.ஆயிரத்து 69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரை உள்ள ஆண்டு வருமானத்திற்கு வரிகழிவு செய்யப்படும். அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு. மேற்குவங்கம் ஆந்திராவில் இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்படும். தேசிய கால்நடை திட்டம் துவக்கப்படும். விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 250 மில்லியன் உணவு தானிய உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


