முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்ட சபை தேர்தலை நடத்த ரூ.200 கோடி தேவை

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஏப்ரல்.4 - கர்நாடக மாநில சட்ட சபை தேர்தலை நடத்தரூ.200 கோடி செலவாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்ட சபைக்கு மே மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.இந்தத் தேர்தலில் போலீஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் சராசரியாக 62 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன. இந்த முறை இதை  65 சதவீதமாக உயர்த்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொகுதி ஒன்றுக்கு ரூ.2.5 லட்சம் செலவிட தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜா கூறியதாவது:

கர்நாடக மாநில சட்ட சபை தேர்தலை நடத்தரூ.200 கோடி செலவாகும். இந்த செலவை மாநில அரசுதான் ஏற்க வேண்டும். இதில் முதல் கட்டமாக ரூ.100 கோடி கொடுத்துள்ளதாகவும், மீதி தொகையை விரைவில் வழங்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்