முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்

புதன்கிழமை, 9 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக். 9 - பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். 

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க 375 கி.மீ. பாதயாத்திரையை மேற்கொண்டது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசியதாவது, 

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் கவனத்தில் கொள்ளப்படும். நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு முதலிடம் கொடுக்கப்படும். இதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதியில் விவசாயிகள் மேம்பாடு அடைய வழிவகை செய்யப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். தற்போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். பா.ஜ.க.வின் செயல்பாடுகள் தங்களை பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தற்போது நடக்கும் ஆட்சியையும், மத்திய அரசின் காங்கிரஸ் கூட்டணி அரசையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்