எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக். 16 - நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் கே.எம். பிர்லா மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முக்கிய பைல்கள் மாயமாகி விட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மாயமான பைல்களை கண்டுபிடிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனையிட்டு சில பைல்களை மீட்டது. என்றாலும் முக்கியமான பைல்கள் கிடைக்கவில்லை.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியதால் மழைக்கால கூட்டத் தொடர் பாதிக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்த முறைகேட்டில் ஆதாயமடைந்த தனியார் நிறுவனங்கள் பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் பிரபல தொழில் அதிபர் கே.எம். பிர்லா என்ற குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. நேற்று முதல் தகவல் அறிக்கை பதவு செய்தது.
இதே போல் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான பிரிண்டல்கோ நிறுவனம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ளது. இந்த நிறுவனத்துக்கு 2005 ம் ஆண்டில் சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. அந்நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கி உள்ள நிலையில் நிலுவை இல்லாதவாறு கணக்குகளை காட்டியுள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் அதிபர் 48 வயதான கே.எம். பிர்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு செய்யப்பட்டதை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, ஐதராபாத்தில் உள்ள அவரது நிறுவனங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. கே.எம். பிர்லா மீது மோசடி மற்றும் சதி திட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவருக்கு சி.பி.ஐ. விரைவில் சம்மன் அனுப்ப உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தினாலும் வழக்கு விவரங்களை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. முறைகேடு நடந்த போது நிலக்கரி துறையை பிரதமர் மன்மோகன்சிங் கவனித்து வந்தார். இதனால் இந்த புகாரில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் நேரடியாக குற்றம் சாட்டி வந்தன. இந்த நிலையில் தொழில் அதிபர் கே.எம். பிர்லா மீதும் முன்னாள் செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
29 Jan 2026சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்
-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் கால அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தி.மு.க.
-
2027 நிதி ஆண்டில் ஜி.டி.பி. 7.2 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
29 Jan 2026புதுடெல்லி, 2025-26ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
-
13,080 நபர்களுக்கு வேலை அளிக்க 912.97 கோடி ரூபாய் முதலீட்டிற்கு 55 நிறுவனங்கள் தமிழக கைத்தறி, துணிநூல் துறையுடன் ஒப்பந்தம்: துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கையெழுத்து
29 Jan 2026சென்னை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்கள் 13,080 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 912.97 கோடி ரூபாய்
-
விஜய் தலைமையில் வரும் 2-ம் தேதி த.வெ.க.வின் 3 - ம் ஆண்டு தொடக்க விழா
29 Jan 2026சென்னை, த.வெ.க.
-
அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
29 Jan 2026சேலம், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
29 Jan 2026புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான வ
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
29 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் நாள்தோறும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில்
-
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் தங்கம் 1 கிராம் விலை 9,520 ரூபாய் உயர்வு: ஒரு சவரன் ரூ.1,34,400-க்கு விற்பனை
29 Jan 2026சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்: இந்திய நிறுவனங்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பிரதமர்
29 Jan 2026டெல்லி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்த வாய்ப்பை இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எ
-
இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா கருத்து
29 Jan 2026வாஷிங்டன், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 5 நாட்கள் இலவச சிகிச்சை: மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு
29 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களுக்கு விபத்து நடந்த முதல் ஐந்து நாட்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில நிதிநில
-
திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் போட்டி?
29 Jan 2026திருநெல்வேலி, என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க.வின் பட்டியலில் இடம்பெறும் என்று பா.ஜ.க.
-
மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும்: பார்லி.யில் மத்திய அமைச்சர் உறுதி
29 Jan 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தின் தரம் மேலும் உயர்த்தப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
-
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்..? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
29 Jan 2026சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க.
-
த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயண விவரம் வெளியீடு: வருகிற 1-ம் தேதி முதல் தொடக்கம்
29 Jan 2026சென்னை, த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு சுற்றுப் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
-
ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: 9 ஆண்டுகளுக்குப் பிறகு 57 பேர் விடுதலை
29 Jan 2026மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 57 பேரை விடுதலை செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் 4 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
29 Jan 2026சென்னை, சென்னையில் உள்ள 4 கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.


