முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள கவர்னராக ஷீலாதீட்சித் பதவி ஏற்பு

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், மார்ச். 12 - கேரள மாநில கவர்னராக இருந்த நிகில்குமார் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் குதித்து உள்ளார். 

காங்கிரஸ் கட்சி சார்பில் அவுரங்காபாத் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து கேரள மாநில புதிய கவர்னராக டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் ஷீலாதீட்சித் நியமிக்கப்பட்டார். 

அவர் நேற்று புதிய கவர்னராக பதவி ஏற்றுக் கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

புதிய கவர்னர் ஷீலாதீட்சித்துக்கு முதல் அமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

முன்னதாக ஷீலாதீட்சித் நேற்று முன் தினம் மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். 

விமான நிலையத்தில் அவருக்கு முதல் அமைச்சர் உம்மன்சாண்டி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

உம்மன் சாண்டி தனது மனைவி மரியாவுடன் சென்று ஷீலாதீட்சித்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். 

வரவேற்பு நிகழ்ச்சியில் கேரள சட்டசபை சபாநாயகர் கார்த்திகேயன், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்