முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை: கனமழைக்கு 2 சிறுவர்கள் பலி

சனிக்கிழமை, 25 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

ஜம்மு - அமர்நாத்தில் கனமழை பெய்ததால் யாத்ரீகர்களின் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்திரை கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.

59வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக யாத்ரீகர்கள் குழு சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் கனமழை கொட்டியது. 

இந்த மழையால் யாத்ரீகர்கள் நடுவழியில் சிக்கி தவித்தனர். இந்த மழைக்கு சிறுவன் மற்றும் சிறுமி பலியாகியுள்ளனர். மேலும், 11 பேர் மழையால் காணமல் போனததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்டால் மலையடிவார முகாம்களில் சிலவற்றில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதாகவும், மழை சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து