எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிக மார்க் எடுத்தால் மட்டும் பிரதமராகி விட முடியுமா? புரிந்து படித்தால் மட்டுமே சாதிக்க முடியும்
நாளைய உலகம் மாணவர்கள் கையில்தான் உள்ளது. நாளைய தலைவர்கள், எதிர்கால நட்சத்திரங்கள் என்று மாணவர்கள் போற்றப்படுகின்றார்கள்.
நாட்டிற்கும் வீட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகள் மாணவர்களுக்கு உள்ளது. மாணவர்களால் எதிர்கால உலகம் வளம் பெற வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாக வேண்டும். இதற்கு நல்ல உடல் நலம், மன நலம், நல்ல சமூக நோக்கு ஆன்மீக பார்வை இவையும் நலமாக இருக்க வேண்டும்.
சிறந்த மாணவர்களுக்கு அடிப்படை நல்ல கல்வி. இன்றைய இந்திய கல்வி முறை உலக மாற்றங்களுக்கு ஏற்ற கல்வி முறையாக இல்லை. நம் கல்வி முறை அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இல்லை. தற்போதைய போட்டி உலகினை எதிர் கொள்ள மாணவர்களின் திறமைகளை வளர்க்க அவர்களிடம் கலந்துரையாடும் சிந்தனையை உருவாக்க வேண்டும். கலந்துரையாடும் தன்மை அவர்களை சிறந்த எதிர்கால தலைவர்களாகவும் தொழில் துறை வல்லுநர்களாகவும் ஆக்க உதவும்.
மாணவர்கள் நல்ல உணவு பழக்கங்களை கைக்கொள்ள வேண்டும். சத்தான இயற்கை உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கம் அவர்களை சிறந்த உடல் நலத்துடன் வாழ உதவும். துரித உணவுகள் உள்ளிட்டவைகள் இளம் வயதிலேயே அதிக எடை ஏற்பட்டு விளையாட்டு போன்றவற்றில் சாதிக்க தடையாக இருக்கும்.
வன்முறை கலாச்சாரங்கள் தற்போது தலைதூக்கி வரும் இந்த நிலையில் மாணவர்கள் இளம் பருவத்திலேயே நல்ல சகிப்புத்தன்மை, பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும். என் சமூகம் என் நாடு என்று பற்றுடன் இருந்தால் வன்முறை கலாச்சார சிந்தனை தடுக்கப்படும். பாலியல் வன்முறைகளை தடுக்க பாலியல் பற்றிய முறையான அறிவு மாணவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தேசிய மாணவர் படை, என்.எஸ்.எஸ் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் தற்போதைய போட்டி உலகினை வெல்ல கணிணி கல்வியும் கற்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டு, கல்வி, சமூக அக்கரை உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி முறையான பயிற்சிகள் செய்து வந்தால் எதிர்கால உலகை சிறப்பாக ஆள்வது திண்ணம். எப்போதும், செல்போன்களை கையில் வைத்துக் கொண்டு, அதிலேயே கவனம் செலுத்தக் கூடாது. "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று சொல்லிவிட்டு சென்றார்கள் நமது முன்னோர்கள். எனவே, மாணவர்களின் சிந்தனை எல்லாம் இளம் பருவத்தில் படிப்பிலேயே இருக்க வேண்டுமே தவிர, செல்போன் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கூடாது. மேலும், காதல் கத்திரிக்காய் போன்றவற்றில் மனதை அலைபாய விடக்கூடாது. படிக்கும் காலத்தில் படிப்புதான் முக்கியமே தவிர, காதல் போன்ற தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துவது வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.
ராம்குமாரின் விவகாரமே அதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. வலுவான பொருளாதாரம் இல்லாத வெட்டிதனமான காதல் எதுவும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எனவே, மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். அதையும் மார்பில் குத்தி குத்தி மனப்பாடம் செய்தல் கூடாது. ஆசிரியர் கற்றுதரும் பாடங்களை நன்கு உள்வாங்கி அவற்றை புரிந்து படித்தலே நலம் பயக்கும். மனப்பாடம் செய்து வெற்றி பெரும் மாணவர்கள் வேலைக்கான நேர்காணலுக்கு செல்லும் போது, வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. நன்கு புரிந்து படிக்கும் மாணவர்களே வேலைக்கான நேர்காணலில் வெற்றி பெறுகிறார்கள். புரிந்து படிக்காத மாணவர்கள் நேர்முக தேர்வில் வெற்றி பெறுவதில்லை. இன்றைய நமது கல்விமுறை பல மாணவர்களுக்கு உருப்படியான தமிழையும் கற்றுதருவதில்லை. உருப்படியான ஆங்கிலத்தையும் கற்றுத்தருவதில்லை. அதனால்தான் அவர்கள் சில சமயங்களில் தோல்வியை தழுவ நேரிடுகிறது.
பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவிகள் பேட்டி கொடுக்கும்போது, நான் பிரதமர் ஆவேன். நான் ஜனாதிபதி ஆவேன். என்று சொல்கிறார்கள். அதை படிக்கும் போது நமக்கு சிரிப்புதான் வருகிறது. மனப்பாடம் செய்து மார்க் எடுத்துவிட்டால் எல்லோரும் மோடி ஆகிவிடமுடியாது. எல்லோரும் அப்துல் கலாம் ஆகிவிடமுடியாது. எனவே, நமது மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை போல, மாணவ - மாணவிகள் கனவுகாண வேண்டும். அதோடு நிறுத்திக்கொள்ள கூடாது. நன்கு புரிந்து படித்து அந்த கனவை நனவாக்க வேண்டும். விளையாட்டு, விண்வெளி ஆராய்ச்சி போன்று துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒரு சிந்துவை போல் வெள்ளி பதக்கத்தை பெறமுடியும். சாக்சிமாலிக்கை போல வெங்கல பதக்கம் பெற முடியும். மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும், தன்னம்பிக்கையோடு விளையாடியதால்தான் தமிழக வீரர் மாரியப்பனால் தங்க பதக்கத்தை வெல்ல முடிந்தது. ஆக சாதிப்பதற்கு ஊனம் அவருக்கு தடையாக இருக்கவில்லை. அவரது நம்பிக்கை அவருக்கு கைகொடுத்திருக்கிறது. ஆகவே, மாணவ - மாணவிகள் குருட்டு மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்து வெற்றி பெற வேண்டும். பல்வேறு துறைகளிலும் மேற்கண்ட சாதனையாளர்களை பார்த்து வெற்றி பெற சபதம் எடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் நமது முன்னாள் மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்னதை போல, கனவு கண்டு அவற்றை நனவாக்க கடின முயற்சி எடுக்க வேண்டும். என்பதே நமது எதிர்பார்ப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது
26 Oct 2024சேலம் : நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக இருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2024.
26 Oct 2024 -
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
26 Oct 2024சென்னை, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம்
26 Oct 2024சென்னை : தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
-
விக்கிரவாண்டியில் இன்று த.வெ.க. முதல் மாநாடு : முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்
26 Oct 2024விக்கிரவாண்டி : நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.
-
விழுப்புரம், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது: நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு
26 Oct 2024விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சி த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு.
-
ஒபாமாவுக்கு நோபல் பரிசு: டொனால்டு டிரம்ப் விமர்சனம்
26 Oct 2024வாஷிங்டன் : ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி
26 Oct 2024கார்டோம் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
26 Oct 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கார் -லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
-
ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
26 Oct 2024டெல் அவிவ் : ஈரான் மீது நேற்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.
-
தமிழக அரசு வழங்கும் தீபாவளி சிறப்புத் தொகுப்பு நாளை முதல் விற்பனை: அமைச்சர்
26 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையைொட்டி, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு மளிகைப
-
தீபாவளியை முன்னிட்டு தனியார் பஸ்களை இயக்கும் முடிவை அரசு கைவிட ஓ.பி.எஸ். கோரிக்கை
26 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
-
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா
26 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி : டுவிட்டரில் மத்திய அரசு மீது சாடல்
26 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
-
கேரளாவில் இன்று கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
26 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்
26 Oct 2024ராவல்பிண்டி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
கடைசி டெஸ்ட்...
-
மதுரையில் மழை பாதிப்பு உதவி எண்கள் அறிவிப்பு
26 Oct 2024மதுரை : மதுரையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
26 Oct 2024சென்னை : இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை முந்துகிறார் டிரம்ப் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
26 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்
-
மதுரையில் கனமழை பாதிப்பு: மீட்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை
26 Oct 2024சென்னை : மதுரையில் கனமழை பாதிப்பை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா
-
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் அரசு கடும் எச்சரிக்கை
26 Oct 2024தெஹ்ரான், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
-
மாநாட்டிற்கு வரும் த.வெ.க. தொண்டர்களுக்கு ஸ்னாக்ஸ்: விஜய் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு
26 Oct 2024சென்னை, விக்கிரவாண்டியில் இன்று நடக்கும் விஜய் கட்சி மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மாநாட்டிற்கு வரும் தொண்டர்களு
-
மகராஷ்டிர தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
26 Oct 2024மும்பை, மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமது இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ்.தோனி நியமனம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 Oct 2024ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவிக
-
எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
26 Oct 2024புதுடெல்லி : 'எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர். எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.