எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது துணை நிலை கேள்வி ஒன்றிற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு பதிலளித்து பேசினார். மேற்காசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்புடைய மோதலால் பதற்ற நிலை நீடிக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் வான்வெளி பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. இதனையடுத்து, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, விமான சேவைகளின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பது முக்கியம். இதனால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவின் 4,335 விமானங்கள், வெளிநாடுகளை சேர்ந்த 1,187 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று கூறினார்.
இந்த நெருக்கடியான சூழலில், விமான பாதுகாப்பு முக்கியம் என்பதுடன், வான்வெளி மூடப்பட்டுள்ளபோது, அந்த பகுதிகளில் விமானங்களை இயக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்றார். எனினும், இந்த சூழலிலும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 780 பேர் பயணம் செய்துள்ளனர் என கூறினார். பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வான்வெளி திறந்திருப்பதும் முக்கியம். அதன்பின்னரே சீரான விமான சேவையை நாம் தொடர முடியும் என்றும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


