எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம். ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலருக்கு பட்ஜெட் பிரச்சனை, அதன்பிறகு முதல் முறையாக பயன்படுத்திய கார் வாங்கி ஓட்டி பழகிய பின்னர் புதிய கார் வாங்கலாம் என்ற முடிவில் காரை வாங்கிவிடுவர். அதன்பின்னர், ஏற்படும் கசப்பான அனுபவங்களால் பயன்படுத்தப்பட்ட காரை ஏன் வாங்கினோம் என்று புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
ஆனால், தற்போது இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் 3 முதல் 5 ஆண்டுகளில் பழைய காரை மாற்றி புதிய கார் வாங்குவதால், யூஸ்டு கார்கள் மார்க்கெட்டில் சிறந்த முறையில் கிடைக்கின்றன. எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் வைத்தால் இதுபோன்ற கசப்பான அனுபவங்களை தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.
பட்ஜெட் & கார் தேர்வு
பயன்படுத்தப்பட்ட காரை வாங்க முடிவு செய்தபின், பட்ஜெட்டிற்கும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ஹேட்ச்பேக் கார் போதுமானது. அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்டவர்களுக்கு எஸ்.யூ.வி அல்லது எம்.பி.வி கார் மாடல்கள் பொருத்தமாக இருக்கும். அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம்.
மார்க்கெட் நிலவரம்
நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம். காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆன்லைனில் இந்த விபரங்களை எளிதாக பெறும் வாய்ப்பு இருக்கிறது.
விற்பனையாளர் தேர்வு
பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் நம்பகமான விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம். மாருதி, ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது. மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன.
பைனான்ஸ்
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன. காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள், டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொண்டு, அதில் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.
டெஸ்ட் டிரைவ்
விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன், அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும். உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால் கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம். தவிர, கார் எத்தனை கி.மீ., தூரம் ஓடியிருக்கிறது, பாகங்களின் தேய்மானம், விபத்துக்களில் சிக்கிய காரா என்பது உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக அறிந்த பின்னரே வாங்க வேண்டும். முடிந்தால் உங்கள் குடும்பத்தினரை அதில் உட்கார வைத்து வசதியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுங்கள்.
காரின் ஜாதகம்
காரை தேர்வு செய்தபின், அதன் பதிவு புத்தகம் (ஆர்.சி.புக்), சாலை வரி செலுத்தியதற்கான ரசீது, இன்ஷ்யூரன்ஸ், ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால், கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஹைப்பாத்திகேஷன் நீக்கம்
ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி., புத்தகத்தில் ஹைப்பாத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், விற்பனையாளரிடம் என்.ஓ.சி., சான்றை வைத்து ஆர்.டி.ஒ., அலுவலகத்திலிருந்து ஹைப்பாத்திகேஷனை நீக்கி தர சொல்லுங்கள். ஆர்.சி., புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும், காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.
காரின் வரலாறு
பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில், திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, காரின் சர்வீஸ் புத்தகம், டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து வரலாறை கண்டுபிடித்து விடலாம். காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால், நம்பிக்கையான, நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள். அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கார் டீல்
காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு, காரை வாங்க முடிவு செய்தபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள். காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால், உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம்.
பெயர் மாற்றம்
காரை வாங்கும்போதே அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் கையோடு வாங்கி விடுங்கள். மேலும், பழைய உரிமையாளரிடமிருந்து, உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29, காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். ஓல்டு இஸ் கோல்டு...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையையையொட்டி 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்ம
-
சர்வாதிகாரிகளை கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூசகம்..?
04 Jan 2026கீவ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2026
04 Jan 2026 -
மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா திடீரென அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
04 Jan 2026சென்னை, தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
-
ஜனநாயகன் படத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கையா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்
04 Jan 2026கோபி, ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்.
-
அமெரிக்கா தாக்குதல்: வெனிசுலாவில் 40 பேர் உயிரிழப்பு
04 Jan 2026காரகாஸ், வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்
04 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவில் ஒருவர் உயிரிழப்பு
04 Jan 2026கீவ், ரஷ்யாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட்டில் சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
-
கேரளா: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி
04 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்தில் ஒருவர் பலியானார்.
-
வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க சிறையில் அடைப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப
-
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி தொடக்கம்
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
04 Jan 2026திருச்சி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
04 Jan 2026சென்னை, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் என்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
-
விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
04 Jan 2026ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிப்பு: அதிபர் ட்ரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்
04 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜன.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு
04 Jan 2026தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
எதிர்காலத்தில் த.வெ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., தினகரன் இணைவார்கள் செங்கோட்டையன் பேட்டி
04 Jan 2026கோவை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்காலத்தில் த.வெ.க.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
04 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெனிசுலா மீதான தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் 4 காவலர்கள் பலி
04 Jan 2026லாகூர், பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
டி-20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு: 7 ஆல்-ரவுண்டர்கள் சேர்ப்பு
04 Jan 2026டாக்கா, டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொய் வாக்குறுதிகளால் தமிழ்நாடு மக்கள் சலிப்பு: தமிழில் பதிவிட்ட அமித் ஷா
04 Jan 2026புதுடெல்லி, தி.மு.க. அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்
04 Jan 2026கராகஸ், வெனிசுவேலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதற்காகன மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.


