எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத் தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகன், மாயகிருஷ்ணன், தவனகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி துரைபாபு அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாய பொருட்களுக்கும் உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து 1 ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்ட ஈடாக வழங்கி விவசாயகளை பாதுக்க வேண்டும், தென்மாவட்டங்களின் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இயற்கை உணவு திருவிழாவினை காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நடத்த வேண்டும்.
செய்யாறு மற்றும் பாலாற்றிலும் 10.கி.மீ தொலைவிற்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும், மதுராந்தகம் வட்டம் வல்லிபுரம், ஈசூர்புதூர் இடையே நீர் தேக்க அணை கட்டித்தரக் கோரியும் வரும் ஜனவரி 06 ஆம் தேதியன்று மதுராந்தகம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், அரசு துறைகளான வேளாண்மைத்துறை, தோட்டகலைத்துறை, பொறியியல்துறை ஆகிய துறைகள் அரசின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்த விதமான சலுகைகளையும் விவசாயிகளுக்கு முறையாக தரப்படவில்லை. இதை அதிகாரிகளே அவர்களுக்கு தேவையான நபர்களுக்கு கொடுத்துவிடுகின்றனர்.
இதை வெளிப்படை தன்மையாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிப்ரவரி மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தப்படும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பபட்டன. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


