முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உறுப்புக்களைப்பாதிக்கும் உணர்ச்சிகள்! ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்!!

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      வாழ்வியல் பூமி
Image Unavailable

அதிக நேரம் பெற்றோரு டன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமா ன முறையில் பெறாத குழ ந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது.

இதனால அவர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம், மனநிலை ஆகியவை பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணர்ச்சிகள் உங்கள் உள் உறுப்புகளை பாதிக்கின்ற * சதாசர்வகாலமும் யோசனை , யோசனை என ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குபவர்களுக்கு மண்ணீரல் பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அதிக சோர்வும், கவனக் குறைவும் இவர்களுக்கு ஏற்படுகின்றது.

* அதிக படபடப்பு படுபவர்கள க் கு மூச்சுத் திணறல் பெருங்குடல் வீக்கம் போன்றவை ஏற்படுகின்றன.

* மகிழ்ச்சியில் கூட தலைகால் புரியாமல் குதிப்பவர்களுக்கு தூக்கமின்மை, பரபரப்பு, நெஞ்சு படபடப்பு ஏற்படும்.

* எதற்கெடுத்தாலும் பயம், பயம் என அஞ்சி நடுங்குபவருக்கு சிறு நீர் அடிக்கடி வெளியேறும். கட்டுப்பாடில் லாமல் வெளியேறும்.

* கோபத்தின் விளைவாக கல்லீரல், பித்தப்பை பாதிக்கப்படும். ரத்தக் கொதிப்பு, மயக்கம், வெடிக்கும் தலைவலி ஏற்படும்.

* அதிக துக்கம் உடலை சக்தி இழக்கச் செய்யும். நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.

* உழைப்பில்லாமல் சதா உட்கார்ந்தே காலம் தள்ளினால் தசை தேய்வு நிகழும்.

* நீங்கள் 30 வயது மேற்பட்டவராக இருந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் நீங்கள் டி.வி. முன் அமர்ந் திருந்தால் உங்கள் வாழ்வில் 20 நிமிடங்களாவது குறைகின்றது என்பதனை உணருங்கள்.

* நாள் ஒன்றுக்கு சுமார் 15 மணி நேரத்தில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிக உடல் உழைப்பின்றியே செல்கின்றது. இதுவே அதிக நோய்களுக்கு காரணம் ஆகின் றது.

* காலையில் 6 மணிக்காவது எழும் முறையினை பழக்கப்படுத் துங்கள்.

* மன பலம் இல்லாதவரே மன்னிக்கத் தெரியாதவர். எனவே நீ ங்கள் பலம் மிகுந்தவராக ஆக மறக்கவும், மன்னிக்கவும் செய்யுங்கள். உடல் நலமும், உள்ள நலமும் சிறப்பாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்