எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - ஜல்லிக்கட்டு மீதான நடவடிக்கையை நீக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் 3வது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்ய கோரியும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. திண்டுக்கல்லிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் தன்னெழுச்சியாக வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு அனைத்து கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள், வர்த்தகர்கள், லாரி உரிமையாளர்கள், கட்டுமான பொறியாளர்கள் என பல தரப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாணவர்கள் போராட்டத்திற்கு உணவு, குடிநீர், பிஸ்கெட் போன்ற பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் கட்சியினர் அளிக்கும் எந்த உதவியையும் மாணவர்கள் ஏற்காமல் புறக்கணித்தது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
நாங்கள் தமிழ் உணர்வால் ஒன்று சேர்ந்துள்ளோம், உணவுக்காக அல்ல என்று கூறி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில், பனி, இரவு, பகல் என இவர்களது போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மாணவிகளும் ஆர்வம்
மாணவர்களுக்கு சற்றும் சளைக்காமல் மாணவிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள், அரசு கல்லூரி, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையிலும் தாங்களாகவே வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் எம்.வி.எம். அரசு கல்லூரிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட போதும், மாணவிகளை வெளியே அனுப்ப வில்லை. இதனையடுத்து அவர்கள் கல்லூரிக்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு போராட்டம் நடந்த கல்லறை தோட்டம் பகுதிக்கு வந்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி
பழனியில் தனியார் கல்லூரி மாணவிகளை வெளியே அனுப்பியதால் அவர்கள் அந்த கல்லூரி முன்பாகவே ஆர்ப்பாட்டம் செய்தனர். பழனி ரவுண்டானா பகுதியில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் மாணவர்கள் பழனி தபால் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். இதேபோல் காந்திகிராம கிராமிய கல்லூரி மாணவர்கள் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதேபோல் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் தொய்வின்றி நடந்து வருகின்றது. இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெடர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
20 Feb 2026- திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம்,வென்னிமலை கோவில்களில் மாசி உற்சவாரம்பம்.
- மருதமலை, திருப்போரூர், காங்கேயம் கோவில்களில் முருகர் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
20 Feb 2026


