முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய போக்குவரத்து கழக தொழிலாளர் பணிமனை பெயர் பலகை திறப்பு விழா

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து பணிமனை வளாகத்தில் தேசிய போக்குவரத்து தொழிலாளர் சங்கம் துவக்க விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய அரசு வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான காஞ்சி ஜி.வி.மதியழகன் தலைமை தாங்கி பெயர் பலகையினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நீராளன் அனைவரையும் வரவேற்றார். விஷ்னுபிராசாத் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், சடையாண்டி, சங்கரலிங்கம், பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகி வீரபத்தரன் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்